ஆபிரகாம் லிங்கன் கொலை செய்யப்பட்டது ஏன்?

அமெரிக்க உள்நாட்டுப்போர் முடிவடைந்து ஐந்து நாட்களே நிறைவடைந்திருந்த சூழலில், ஏப்ரல் 14, 1865 – புனித வெள்ளியன்று தன் மனைவியுடன் நாடகம் காண சென்றிருந்த ஆபிரகாம் லிங்கன் அவர்கள் ஜான் வில்ஸ் பூத் என்ற புகழ் பெற்ற நடிகரால் சுட்டுக்கொல்லப்பட்டார். கறுப்பின மக்களுக்கு விடுதலை கொடுத்தது பொறுக்காமல் தென் மாநிலங்களின் ஆதரவாளரான பூத் ஆபிரகாம் லிங்கன் அவர்களை சுட்டுக்கொன்றார். மாபெரும் கொடுமைகளை அனுபவித்துவந்த கறுப்பின மக்களுக்கு விடுதலை பெற்றுத்தந்த மாபெரும் தலைவர் என்ற காரணத்திற்காகவே ஆபிரகாம் லிங்கன் இந்த பூமி உள்ளவரைக்கும் நினைவில் வைத்துக்கொள்ளப்படுவார்.

Read more

கல்வியில் இங்கிலாந்துக்கு முன்னோடி இந்தியா – இது வரலாறு

உலக அளவில் புகழ்மிக்க பல்கலைக்கழகங்களின் வரிசையில் அமெரிக்காவின் ஹார்வேர்டு, இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு, கேம்ப்ரிட்ஜ் போன்ற பல்கலைக்கழகங்கள் இடம்பெறுகின்றன. ஆனால் இந்தப் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்படுவதற்கு முன்பே மாபெரும் பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் இருந்துள்ளன. இன்னும் சரியாக சொல்லப்போனால் கல்வியில் இங்கிலாந்துக்கு முன்னோடி இந்தியா என்பது தான் எதார்த்தமான உண்மை.

Read more

போராளி பிரபாகரன் இறந்த கதை

பிரபாகரன்: வாழ்வும் மரணமும் என்ற புத்தகத்தில் ஆசிரியர் பா ராகவன் பல விசயங்களை அருமையாக ஆராய்ந்து தொகுத்து வழங்கியிருக்கிறார். பிரபாகரன் இளமைக்காலம் முதல் இறுதிக்காலம் வரையிலான பல்வேறு விசயங்களை சுருக்கமாகவும் சரியாகவும் படிக்க வேண்டுமெனில் இந்த புத்தகத்தை வாசிக்கலாம். இதன் விலை 199 ரூபாய். நீங்கள் Kindle Unlimited கணக்கு வைத்திருந்தால் இலவசமாகவும் தரவிறக்கி படிக்கலாம். இங்கே பிரபாகரன் இறந்த கதை எனும் தலைப்பில் ஆசிரியர் அளித்திருக்கும் விசயங்களை பார்ப்போம்.

Read more

மேதகு பிரபாகரன் ஆயுதமேந்தியது ஏன்?

1972 ஆம் ஆண்டு பிரபாகரனுக்கு வயது பதினாறு. அப்போது பிரபாகரன் அவர்களின் அக்காவின் திருமணம் நடைபெற்றது. திருமண நிகழ்விற்கு ஊரே கூடியிருந்த போதும் பிரபாகரன் எங்கோ சென்றுவிட்டு தாமதமாகவே வந்து சேர்ந்தார். நண்பர்களுடன் வெறுமனே ஊர் சுற்றும் சிறு பிள்ளையென்றால் பரவாயில்லை, ஆனால் பிரபாகரன் ஏதோ ஒரு காரணத்தோடு தான் ஊர் சுற்றுகிறார் என்பது தெரிந்தபடியால் வேலுப்பிள்ளை கவலையாகவே இருந்தார்.

Read more

புலிட்சர் பரிசு உருவான வரலாறு | ஜோசேப் புலிட்சர் | மஞ்சள் பத்திரிகையின் தந்தை

பத்திரிக்கை துறையில் சம்பாதித்த பணத்தின் ஒரு பகுதியை கொலம்பியா பல்கலைக்கழகத்திடம் கொடுத்து பத்திரிக்கை துறைக்கான இருக்கை ஒன்றினையும், இதழியல், இசை, இலக்கியம் இவற்றில் சிறந்து விளங்குகிறவர்களுக்கு பரிசு வழங்கும் படியும் கேட்டுக்கொண்டார். புலிட்சர் அக்டோபர் 29,1911 அன்று இறந்தார். அவர் இறக்கும் வரையிலும் இவ்விருது வழங்கப்படவில்லை. அதன் பின்னரே முதல் விருதானது 1917 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

Read more

ஔவை – முருகன் சந்திப்பு நடைபெற்றதா உண்மையாகவே?

முருகன் பெருமை பேசுகின்ற திரைப்படங்கள் பார்க்கும் போது ‘சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என சிறுவன் வடிவில் இருக்கும் முருகன் ஔவையாரிடம் கேட்கும் காட்சியில் ஔவையை அறிவால் வென்றிருப்பார் முருகன். இப்படித்தான் காட்சி அமைப்பு இருக்கும். ஆனால் இலங்கை ஜெயராஜ் இது சம்பந்தமாக அற்புதமான கருத்தை எடுத்துரைத்து இருப்பார் ஒரு பட்டிமன்ற நிகழ்வில். அதையே இங்கே உங்களிடம் பகிர்ந்துகொள்ள இருக்கிறோம். முழுவதுமாக படித்து முடிக்கும் போது ஏன் ஔவையார் அறிவில் உயர்ந்தவர் என்பதை உங்களால் புரிந்துகொள்ள இயலும்.

Read more

காந்தியும் மதுரையும் : காந்திக்கு மதுரை ஏற்படுத்திய தாக்கங்கள்

அகிம்சை என்ற பேராயுதத்தை போராட்டத்திற்கு பயன்படுத்த முடியும் என்பதை நிரூபித்து அதனாலேயே உலகம் முழுமைக்கும் போற்றப்படுகிறவர் மஹாத்மா காந்தி. காந்தி என்றவுடன் நம் நினைவுக்கு வருவது மூக்குக்கண்ணாடி, இடுப்பில் சிறிய வேட்டி, கைத்தடி இவைதான். வழக்கறிஞர் பயின்றவர் காந்தி. அப்படி இருக்கும் போது அவர் மேலாடை உடுத்தும் வழக்கம் கொண்டவர் என்பதனை நம்மால் யூகிக்க முடிகிறது. பிறகு ஏன் காந்தி அவர்கள் மேல் சட்டை அணிவதை தவிர்த்தார் என்ற கேள்வி இயல்பாகவே அனைவரது மனதிலும் எழும் கேள்விதான்.

Read more

1984 போபால் விஷவாயு பேரழிவு : இன்றும் தொடரும் துன்பம்

அமெரிக்காவை சேர்ந்த யூனியன் கார்பைடு கார்ப்பரேஷன் க்கு சொந்தமான தொழிற்சாலை ஒன்று இந்தியாவில் இருக்கும் போபால் எனும் நகரில் துவங்க அனுமதி அளிக்கப்பட்டது. பூச்சிக்கொல்லிகள் தயாரிப்பதற்கு இந்த தொழிற்சாலை துவங்கப்பட்டது. இந்தியாவில் அவசர நிலையானது 25 ஜூன் 1975 அன்று பிறப்பிக்கப்பட்டது அதற்கடுத்த சில மாதங்களில் யூனியன் கார்பைடு நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது [அக்டோபர் 31, 1975]. ஜனநாயகம் முற்றிலும் முடக்கப்பட்டு இருந்த ஒரு காலகட்டத்தில் தான் இந்த தொழிற்சாலை துவங்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.

Read more

காந்தி ஜெயந்தி – சில சுவாரஸ்யமான தகவல்கள் (Gandhi Jeyandi)

அக்டோபர் 02 – உலக மக்களால் விரும்பப்படும் மஹாத்மா காந்தி அவர்களினுடைய பிறந்த தினம். ஒவ்வொரு பிறந்த தினத்தன்றும் மஹாத்மா தவறாமல் நினைவுகூறப்படுகிறார். இந்தப்பதிவில் காந்தி அவர்களைப்பற்றிய

Read more

காந்தி கொலை வழக்கு விசாரணை எப்படி நடைபெற்றது?

இந்திய விடுதலைக்கு அரும்பாடுபட்ட மகாத்மா காந்தி அவர்கள் ஜனவரி 30,1948 ஆம் ஆண்டு கோட்சே என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். சுதந்திர இந்தியா சந்தித்த மிக முக்கிய வழக்குகளில் ஒன்றாக கோட்சே வழக்கு பார்க்கப்படுகிறது. இந்திய வரலாற்றை படிக்கும் எவரும் காந்தி கொலை வழக்கை படிக்காமல் முடிவை எட்டமாட்டார்கள். அப்படிப்பட்ட காந்தி கொலை வழக்கு விசாரணை நடைபெற்ற விதத்தை எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் தன்னுடைய எனது இந்தியா புத்தகத்தில் எதார்த்த நடையில் எழுதி இருக்கிறார்.

Read more