PAN Card Fraud : உங்கள் பான் கார்டு மூலமாக அடுத்தவர்கள் லோன் வாங்கியிருந்தால் தெரிந்துகொள்வது எப்படி?

நாளுக்கு நாள் ஆன்லைன் மூலமாக நடைபெறும் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அந்தவகையில், அடுத்தவர்களின் பான் கார்டு மூலமாக கடன் வாங்கும் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. Dhani Loan App போன்ற ஆப்கள் சரியாக சரிபார்க்காமல் ஆன்லைன் மூலமாக சமர்ப்பிக்கப்படும் தகவல்களைக் கொண்டு லோன் வழங்குகின்றன. இந்த மொபைல் ஆப் மீது அப்படி தவறாக லோன் பெற்றதாக வழக்குகள் உள்ளன. அப்படி, உங்களது PAN Card கொண்டு யாரேனும் உங்களுக்கு தெரியாமலே லோன் வாங்கியிருந்தால் என்ன செய்வது? எப்படி புகார் அளிப்பது? இந்தக் குற்றங்கள் எப்படி நடக்கின்றன?

Read more

ஹெல்த் இன்சூரன்ஸ்க்கு செலுத்தும் பணம் வீணா? எடுக்கலாமா வேண்டாமா?Health Insurance

Health Insurance என்பது நீங்களும் ஒரு இன்சூரன்ஸ் கம்பெனியும் மேற்கொள்ளும் ஒப்பந்தம். அதற்கான பணத்தை நீங்கள் செலுத்திவிட்டால் உங்களுக்கு மருத்துவ குறைபாடு ஏற்படும் போது மருத்துவமனையில் ஆகும் செலவை அந்தக்கம்பெனி ஏற்கும். அறுவை சிகிச்சை துவங்கி உங்களுக்கு ஆகும் மருத்துவ செலவு, நீங்கள் மருத்துவமனையில் தங்கி இருப்பதற்கான செலவு என அனைத்தையும் குறிப்பிட்ட இன்சூரன்ஸ் நிறுவனம் உங்களுக்கு தந்துவிடும். சாமானிய மக்கள் திடீரென ஏற்படும் பெரிய அளவிலான மருத்துவ செலவுகளை தவிர்ப்பதற்காக ஹெல்த் இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்துகிறார்கள்.

Read more

எதிர்காலத்திற்கு பணத்தை சேமிக்க 5 எளிய வழிகள் | 5 simple ways to save money tamil

பணத்தை சேமிக்க ஒவ்வொருவருக்குமே ஆசை தான். அதில் இருக்கும் முதன்மையான சிக்கலே “துவங்குவது” தான். ஏதோ ஒருவகையில் நாம் பணத்தை சேமிக்க துவங்கிவிட்டோம் என்றால் அதுவே நம் பழக்கமாக மாறிவிடும். இதன் மூலமாக குறுகிய மற்றும் நீண்டகாலத்திற்கு தேவைப்படும் சேமிப்பை நம்மால் செய்திட முடியும். இங்கே கொடுக்கப்படும் சில வழிமுறைகள் பண சேமிப்பை செய்திட நினைப்போருக்கு சிறந்த வழிகாட்டியாக அமையும்.

Read more

Personal Finance இல் சிறந்து விளங்கி உங்கள் குடும்பத்தை உயர்த்துவது எப்படி?

பணம் எவ்வளவு சம்பாதிக்கிறோம், எப்படி சம்பாதிக்கிறோம் என்பது முக்கியமே அல்ல. நாம் சம்பாதிக்கும் பணத்தை எப்படி கையாளுகிறோம், எப்படி நிர்வகிக்கிறோம், எப்படி திட்டமிடுகிறோம் என்பது தான் முக்கியம். ஆங்கிலத்தில் இதனை Personal Finance என்று சொல்லுவார்கள். நன்றாக படித்த, மாதம் 50 ஆயிரத்திற்கும் மேல் சம்பாதிக்கும் பலர் கூட இன்று Personal Finance இல் போதிய அக்கறை செலுத்தாமல் இருக்கிறார்கள். ஆகவே, அவர்கள் எவ்வளவு சம்பாதித்தாலும் கூட பண நெருக்கடியில் சிக்கித்தவிக்கிறார்கள். இதனை தவிர்க்க இங்கே 7 எளிய யோசனைகளை தந்துள்ளோம். அதனை உங்களது வாழ்க்கையில் செய்து பார்ப்பதன் மூலமாக சிறந்த முன்னேற்றத்தை உங்களால் எட்டிட முடியும்.

Read more

வீட்டுக்கடன் வாங்குவதற்கு முன்னால் இந்த 5 விசயங்களை தெரிந்துகொள்வது நல்லது

சொந்தமாக வீடு வாங்குவது அல்லது சொந்தமாக வீடு கட்டுவது என்பது பலரது வாழ்வின் லட்சியங்களில் ஒன்று. நமக்கு முந்தைய தலைமுறையில் உள்ளவர்கள் சிறிது சிறிதாக வீடுகட்ட பணம் சேர்த்து அதன் பின்னர் கடனே வாங்காமல் வீடு கட்டுவார்கள். ஆனால் நம் காலத்தில், இப்போதுள்ள சூழலும் வங்கி நடைமுறைகளும் வீட்டை கட்டிவிட்டு பிறகு மாதம் மாதம் பணத்தை தவணை முறையில் செலுத்தும் “Home Loan” ஐ இலகுவாக்கி இருக்கின்றன.இதனால் மாதம் ரூ30,000 சம்பாதிக்கும் ஒருவராலும் இன்று ரூ20,00000 “Home Loan” வாங்கி சர்வ சாதாரணமாக தான் ஆசைப்பட்ட வீட்டை சொந்தமாக வாங்கிக்கொள்ள முடியும் அல்லது கட்டிக்கொள்ள முடியும்.

Read more

கிரெடிட் கார்டை புத்திசாலித்தனமாக பயன்படுத்த 10 யோசனைகள்

கிரெடிட் கார்டு உங்களுக்கு தேவைப்படுமா என்ற கேள்விக்கு பதில் தெரிந்துகொள்வதோடு மட்டுமல்லாமல் நீங்கள் கிரெடிட் கார்டு மூலமாக செலவு செய்த தொகையை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் திருப்பி செலுத்தும் திறன் உங்களுக்கு உள்ளதா என்பதற்கும் பதில் தெரிந்துகொண்டு கிரெடிட் கார்டு வாங்குவது சிறந்தது. உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு குடும்பத்தலைவர் எனில், மாத இறுதியில் பண கஷ்டம் ஏற்படும் சூழலில் கிரெடிட் கார்டு பயன்படுத்தி குடும்பத்திற்கு தேவையான பொருள்களை வாங்கிக்கொண்டு மாத சம்பளம் வந்த உடனேயே செலவு செய்த தொகையை திரும்ப கட்டிவிட முடியும் என்றால் நீங்கள் கிரெடிட் கார்டு வாங்கலாம். ஒருமுறை நீங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கிரெடிட் கார்டு பில்லை [Credit Card Bill] திருப்பி கட்டவில்லை என்றாலும் கூட நீங்கள் மிக அதிகமான வட்டித்தொகையை கட்ட வேண்டி இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அது உங்களுக்கு தேவையில்லாத சுமையை கொடுத்துவிடும்.

Read more

செல்வமகள் சேமிப்பு திட்டம் | எப்படி துவங்குவது? விதிகள் என்னென்ன?

மத்திய அரசினுடைய “பெண் குழந்தையை காப்பாற்றுங்கள் [Beti Bachao Beti Padhao]” என்ற பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக செல்வமகள் சேமிப்புத்திட்டம் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தியா முழுமைக்கும் இந்தத்திட்டம் பல்வேறு ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்பட்டுவருகிறது. இந்தத்திட்டத்திற்கு மத்திய அரசு வைத்துள்ள பெயர் “சுகன்யா சம்ரிதி யோஜனா [sukanya samrithi yojana]. தமிழகத்தில் இந்தத்திட்டம் செல்வமகள் சேமிப்புத்திட்டம் என்று அழைக்கப்படுகிறது. இதில் பெற்றோர்கள் கட்டும் பணத்திற்கு 80C பிரிவின் கீழ் வரிவிலக்கு பெற முடியும். அதேபோல பணத்தை திரும்பப்பெறும் போதும் வரிவிலக்கு பெற முடியும்.

Read more