பகுத்தறிவு கடவுளுக்கு எதிரானதா? படித்துவிட்டு சொல்லுங்கள்

புகைத் தொடர் வண்டியை கண்டுபிடித்தவர் யார் என்றால் மிரளுவார்கள். நம் வீட்டில் எரிகின்ற மின் விளக்கைக் கண்டறிந்தவர் யார் என்றால் வாய் திறக்க மாட்டார்கள். புற்று நோயைக் குணப்படுத்தும் ரேடியத்தை கண்டறிந்தவர் யார் என்றால் பேசவே மாட்டார்கள். தமிழ்நாட்டை வளப்படுத்தும் காவிரியாற்றின் பிறப்பிடம் எது என்று வினவினால் கவலை கொள்ள மாட்டார்கள். ஆனால் எமதர்மனுடைய வாகனம் எது என என்று கேட்டால் உடனே எருமைக் கடா என்று பதில் சொல்வார்கள். கைலாயம், வைகுந்தம், சொர்க்கம், நரகம் பற்றிக்கேட்டால் சென்று பார்த்து வந்தவர்களைப்போல மட மடவென்று பதில் சொல்லுவார்கள்

Read more