மாபெரும் தமிழ்க் கனவு | Maperum Tamil Kanavu Tamil Book

அரசியல் ஆர்வம் ஊற்றெடுக்கும் தமிழ் பிள்ளைகளுக்கு கடந்த கால அரசியல் ஆளுமைகளை பற்றிய வரலாற்றை தெரிந்துகொள்வது மிகவும் அவசியமான ஒன்று. அந்த வகையில் கடந்த 50 ஆண்டுகாலமாக தமிழகத்தை ஆட்சி செய்துவரும் தமிழகத்தின் இருபெரும் கட்சிக்கும் ஒரே முன்னோடியாக திகழ்கின்ற பேரறிஞர் அண்ணா அவர்களை பற்றிய வரலாறு இக்கால தமிழ்ப் பிள்ளைகளுக்கு கிடைக்கப்பெற வேண்டும்.

அறிஞர் அண்ணா அவர்களைப்பற்றிய சிறு சிறு தொகுப்புகள் ஆங்காங்கே சில புத்தகங்களாக தொகுக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால் ஒட்டுமொத்தமாக அவரது வாழ்வையே சுருக்கி நமக்கு விளங்க வைக்கக்கூடிய ஒரு புத்தகத்திற்கான இடம் காலியாகவே இதுவரைக்கும் இருந்து வந்தது. அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்காக ஒரு புத்தகம் வந்திருக்கிறது. அந்தப் புத்தகம் தான் “மாபெரும் தமிழ்க் கனவு”

Read more