போர் தரும் வலி – 14 வயதில் கை கால்களை இழந்து வாடும் நஜ்லா இமாத் லாப்டா | Najla Imad Lafta

இப்போதெல்லாம் எளிமையாக போர், தாக்குதல்கள் பற்றி விரும்பி பேசுகிறவர்களை பார்க்க முடிகிறது. குறிப்பாக பாகிஸ்தானுடன் ஏதேனும் உரசல் ஏற்படும் போது நம்மிடம் தான் ராணுவ பலம் இருக்கிறதே அவர்களை தாக்கி வென்றுவிடலாமே என பேசுவார்கள். ஆனால் போர், வன்முறை, தீவிரவாதம், தாக்குதல் போன்றவற்றினால் பாதிக்கப்படுபவர்களின் வாழ்க்கையை கண்டவர்களால் “தாக்குதல்” என்ற வார்த்தையைக்கூட பயன்படுத்த முடியாது என்பதே எதார்த்தமான உண்மை. போர், வன்முறை, தீவிரவாதம் போன்றவை ஏற்படும் போது கட்டிடங்கள் சாய்ந்துவிழும், பொருளாதாரம் பாதிக்கப்படும், ஏராளமான உயிர்பலி ஏற்படும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

ஆனால் தாக்குதலுக்கு உட்பட்டு மீண்ட பின்னர், வாழ்வின் பிற்பகுதியை கைகள் இல்லாமல், கால்கள் இல்லாமல் வாழ்வோரைக் கண்டால் போர், வன்முறை, தீவிரவாதம், தாக்குதல் ஆகியவை எவ்வளவு கொடுமையானவை என்பதை புரிந்துகொள்ள முடியும். போருக்கான தேவை ஒருபுறம் இருப்பதனை மறுப்பதற்கு இல்லை, ஆனால் அது எவ்வளவு கொடுமைகளை ஏற்படுத்தும் என்பதனையும் முடிந்தவரையில் அது தவிர்க்கப்பட வேண்டியது என்பதனையும் உணர்த்துவதற்காகத்தான் இந்தக்கட்டுரை.

Read more