சாவர்க்கர் – காந்தி – முதல் சந்திப்பில் நடந்தது என்ன? | Savarkar Gandhi First Meet

சாவர்க்கர் என்ற பெயர் அண்மையில் அடிக்கடி புழக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. காந்தியின் கொலையில் சம்பந்தப்பட்டவர் என்பதைத் தாண்டி பெரிய அளவில் தகவல்கள் பொதுமக்களிடத்தில் கிடைக்கவில்லை. காரணம் அவரைப்பற்றி தமிழ் மொழியில் சில புத்தகங்களே எழுதப்பட்டு இருக்கின்றன.

இப்படி பெரும் ஜனங்களால் எதிர்க்கவும் கொண்டாடவும் படுகின்ற வீர் சாவர்க்கர் இளமையில் எப்படி இருந்திருப்பார்? எந்த சூழலில் அவருடைய மனநிலை மாறி இருக்கும்? அவர் முஸ்லீம் மக்களுக்கு எதிரியா? காந்தியின் கொலையில் அவருக்கு பங்களிப்பு உண்டா? என்பது போன்ற தகவல்களை ஆராய முற்பட்டபோது கிடைத்தது தான் இலந்தை சு. ராமசாமி அவர்கள் எழுதியிருக்கும் “வீர் சாவர்க்கர் – வீரம் வீரம் மேலும் கொஞ்சம் வாழ்க்கை” என்ற புத்தகம். நான் அந்த புத்தகத்தை வாசித்துக்கொண்டிருக்கும் தருணத்தில் நமது வாசகர்களுடன் அதுகுறித்து பகிர்ந்துகொள்ள ஆசைப்பட்டு அதன் சில பகுதிகளை உங்களோடு பகிர ஆசைப்படுகிறேன்.

Read more