குமாரசாமி முதல்வராகிறார் – இப்போ ஜனநாயகம் வென்றுள்ளாதா ? சில கேள்விகள்

எண்ணிக்கை மட்டுமே பிரதானமாக இருக்கக்கூடிய நம் ஜனநாயகத்தில் தற்போது காங்கிரஸ் மற்றும் JDS+ கூட்டணி (118) இடங்களை பெற்று இருப்பதாக கூறி ஆட்சி அமைக்கிறார்கள் .

குமாரசாமி

இதற்கு முன்னதாக பாஜக 104 இடங்களை வென்று தனி கட்சியாக அதிக இடங்களை பெற்றிருந்தாலும் அவர்களால் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற இயலவில்லை . இதனால் பலர் தற்போது ஜனநாயகம் வென்றுள்ளதாகவும் பாஜகவின் திரைமறைவு ஆட்சியை பிடிக்கும் பழக்கத்திற்கு வைக்கபட்ட முற்றுப்புள்ளியாகவும் கொண்டாடுகின்றனர் .

காங்கிரஸ் JDS கூட்டணி ஆட்சி மட்டும் ஐனநாயக வெற்றியா?

உண்மைதான் , பாஜக செய்தது தவறுதான் . அவர்களின் ஆட்சி பறிபோனபின்பு அதற்காக கொண்டாடுகிறவர்கள் அடுத்து அமையவிருக்கும் காங்கிரஸ் JDS கூட்டணி ஆட்சி மட்டும் ஐனநாயக வெற்றியா என உங்களுக்குள்ளேயே கேள்வி கேட்டுக்கொள்ளுங்கள் .

    தற்போது முதல்வராக ஆகப்போகும் குமாரசாமி அவர்களின் JDS கட்சி அம்மாநிலத்தில் வென்ற இடம் வெறும் 38 மட்டுமே . 222 தொகுதிகள் கொண்ட மாநிலத்திற்கு வெறும் 38 தொகுதிகள் வென்ற கட்சி உறுப்பினர் முதல்வராகப்போகிறார் .

    தற்போது JDS உடன் கூட்டணியில் இணைந்துள்ள காங்கிரஸ் JDS கட்சியை பாஜகவின் B என வருணித்தது உட்பட பல விமர்சனங்களை முன்வைத்தது . கூட்டணி வைத்தவுடன் அனைத்தும் சரியாகி விட்டதா ?

    முன்பிருந்த காங்கிரஸ் ஆட்சியின் முதல்வராக இருந்த சித்தராமையா அச்சத்தில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு சொந்த தொகுதியில் தோற்றார் , இன்னொரு தொகுதியில் இரண்டாயிரத்துக்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வென்றார் . அப்படியானால் அவரின் கடந்த கால ஆட்சியை மக்கள் விரும்புகிறார்களா ?

    தற்போதைய நம் ஐனநாயக முறைப்படி எண்ணிக்கைக்கு தான் மதிப்பு , தார்மீக அடிப்படையில் எழும் கேள்விகளுக்கு மதிப்பு இருப்பதில்லை .

கருத்து , கொள்கை வேறுபாடு என அனைத்துமிருந்தும் மக்கள் நலனுக்காகவா தற்போது காங்கிரஸ் JDS கூட்டணி அமைந்திருக்கின்றது , இல்லவே இல்லை பாஜக வந்துவிடக்கூடாது என்கிற ரீதியில் காங்கிரஸ் கட்சியும் இதுதான் கிடைத்த வாய்ப்பு முதல்வராக இருக்க என்கிற ரீதியில் JDS கட்சியும் அமைத்த கூட்டணி இது .

பாஜக செய்தது எப்படி ஐனநாயக விரோதமோ அதனைப்போலவே புதிதாக அமைய இருக்கும் குமாரசாமி ஆட்சியும் ஐனநாயக விரோத ஆட்சியாக மட்டுமே இருக்க முடியும் .

இன்னும் தேர்தல் முறையை மாற்றாமல் இருந்தால் இதுபோன்ற மக்களாட்சி விரோதங்கள் தொடர்ந்து அரங்கேரும் . யார் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள போகிறார்கள் ?

பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *