ஹனன், மீன் விற்கும் கேரள மாணவி | தொந்தரவு செய்யும் நெட்டிசன்ஸ் | Hanan Hamid Story in Tamil

சொந்தக்காலில் நின்று தானே உழைத்து சம்பாரிக்கும் பணத்தில் படிப்பது என்பது மிகவும் சிறப்பானது, மகத்தானது. அந்த சூழ்நிலையை அனுபவித்தவர்களால் நிச்சயமாக அதனை உணர முடியும். நம் ஹனன் தன்னுடைய கல்வி தேவைக்கு மட்டுமல்லாமல் தனது குடும்பத்தையும் காப்பற்றிட சம்பாதிக்கிறார். அவரை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். அதே உறுதியோடு நீங்கள் பயணிக்க வேண்டும். கடினமான சூழ்நிலையில் உங்களது மன உறுதியை என்றுமே விட்டுவிடாதீர்கள், உங்களோடு நான் இருக்கிறேன், கேரளா இவருக்கு ஆதரவு அளித்திட வேண்டும்

 

இவை கேரளா முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் ஹனனுக்கு ஆதரவாக தெரிவித்த வார்த்தைகள்.

 

Kerala Chief Minister Pinarayi vijayan Support Hanan Hamid
Kerala Chief Minister Pinarayi vijayan Support Hanan Hamid

 

இவரை போன்றே எண்ணற்ற மக்களும் திரைத்துறை மற்றும் அரசியல் பிரமுகர்களும் ஹனனுக்கு தங்களது ஆதரவினை தெரிவித்துள்ளனர் .

 

யார் இந்த ஹனன் ? என்ன நடந்தது ?

 

கல்லூரி படிக்கும் ஹனன் என்கிற  மாணவி தன் படிப்பிற்கு ஆகின்ற செலவிற்காகவும் தன்னுடய ஏழ்மையான குடும்பத்தினை கவனிக்கவும் கல்லூரிக்கு போகின்ற நேரம் போக மாலை நேரங்களில் மீன் விற்கும் வேலையை தினந்தொறும் செய்துவருகிறார் . இதற்காக தினந்தோறும் அதிகாலை 3 மணிக்கெல்லாம் எழும் ஹனன் , அன்றைய விற்பனைக்கு தேவையான மீன்களை வாங்குவதற்கு சைக்கிளில் மொத்த விற்பனை கடைக்கு செல்கிறார் . வாங்கிய மீன்களோடு சைக்கிளையும் ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு தம்மன்னம் நோக்கி புறப்படுகிறார் .

அங்கு மீன்களை வைத்துவிட்டு புறப்படும் ஹனன் மீண்டும் வீடுதிரும்பி தயாராகி 60 கிலோமீட்டர் தொலைவில் இருக்கக்கூடிய கல்லூரிக்கு சென்று படிக்கிறார் . கல்லூரி முடிந்த பிறகு , வாங்கிய மீன்களை விற்பனை செய்துவிட்டு வீடு திரும்புகிறார் .

கடந்த வாரம் மாத்ருபூமி என்கிற மலையாள நாளிதழில் ஹனன் என்கிற மாணவியின் கடினமான அன்றாட வாழ்க்கை வெளியானது .

 

Hanan Hamid Sales Fish
Hanan Hamid Sales Fish

 

ஹனன் குறித்த செய்திகள் நாளிதழில் வெளியானவுடன் ஹனனுக்கு ஆதரவு பெருகியது . திரை பிரபலங்கள் உட்பட பலரும் ஆதரவளித்து அவருக்கு உதவிட முன்வந்தார்கள் .

இதோடு நின்றிருந்தால் பரவாயில்லை , ஹனன் பொய் கூறி நடிப்பதாகவும் திரைப்பட இயக்குனர்களின் ஆலோசனையின்பேரில் இவ்வாறு நடந்துகொள்வதாகவும் சமூக வலைதளங்களில் அவரைப்பற்றி அவதூறு பரப்பப்பட்டது .

 

 

தனக்கும்  திரைப்பட இயக்குனர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை , நான் நடிக்கவில்லை . என்னுடைய படிப்பிற்காகவும் குடும்பத்திற்கு என்னால் ஆன உதவியை செய்வதற்காகவும் தான் மீன் விற்பனை செய்வதாக தெரிவித்தார்

 

ஆனாலும் அவரைபற்றிய அவதூறு சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது . மேலும் இப்போது அவர் கடை போடும் போது அதிக கூட்டம் கூடி விடுவதால் போலீசார் கடையை அகற்றும்படி சொல்வதாகவும் கூறுகிறார் ஹனன் .

 

ஹனனுக்கு ஆதரவு

கேரளா முதலமைச்சர் ஹனனுக்கு தனது ஆதரவினை தெரிவித்துள்ளார் . மேலும் ஹனன் குறித்து அவதூறு பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது .

மேலும் பினராயி விஜயன் கூறும்போது ” சமூக வலைதளம் என்பது இரண்டுபக்கமும் கூர்மையான பகுதிகளை கொண்ட ஆயுதம் போன்றது . ஆகையால் பயன்படுத்துபவர்கள் விழிப்புணர்வோடு  இருக்கவேண்டும் .

 

உண்மை எது பொய் எதுவென்று தெரியாமல் செய்திகளை பரப்பிடுவது முற்றிலும் தவறானது . ஹனன் இதிலிருந்து மீண்டு வர வேண்டும் “

 

மத்திய அமைச்சர் அல்போன்ஸ் ஹனனுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார் . அதோடு தவறான செய்திகளை பரப்புவோரையும் கடுமையாக சாடியுள்ளார். அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார் ” ஹனன் குறித்து தவறாக பேசிடும் கேரள சுறாக்களே உங்களை நினைத்து வெட்கப்படுகிறேன் .” என சாடினார் .

 

எனது பார்வை

 

ஹனன் உண்மையாலுமே ஏழையென்றும் அவளது குடும்பத்தையும் கல்லூரி படிப்பு செலவையும் பார்த்துக்கொள்ளவே மாலையில் மீன் விற்பனை செய்கிறாள் என்பதனை அவரது கல்லூரி தோழிகளும் ஆசிரியர்களும் தெரிவித்துள்ளனர் .

ஆனால் சமூக வலைதளத்தில் கட்டற்ற சுதந்திரத்தை பெற்று இருக்கும் சிலரோ வாய்க்கு வந்த பொய்களையெல்லாம் கட்டவிழ்த்து அந்த மாணவியை நிலை குலைய செய்து அவரையே செயல்படாதவண்ணம் செய்துவருகின்றனர் .

 

இவர்களுடைய செயல்பாடு எதற்காக இப்படி இருக்கின்றது ? ஹனன் ஒரு பெண் எண்பதனாலா ? ஏழை மாணவிக்கு சமூகத்தின் உதவியும் அடையாளமும் கிடைக்கிறதே என்கிற ஆதங்கத்தாலா ? எதனால் தான் இப்படி செயல்படுகிறார்கள் என்றே தெரியவில்லை .

 

ஹனனை மதிக்க வேண்டும் , அவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை . அவதூறுகளை பரப்பிடாமல் இருந்தாலே போதுமானது தானே .

ஹனன் மீது வன்முறையை திணிப்பவர்கள் , ஹனன் அல்ல யார் வந்தாலும் இதையேதான் செய்வார்கள் . அவர்களுக்கு இதனைத்தவிர வேறு வேலையே இல்லை .

ஹனன் வேண்டுவதைப்போல “எனக்கு உதவிகள் தேவையில்லை , என்னை எப்போதும்போல மீன் விற்க விட்டாலே போதும் ” என சொல்லவைப்பதற்காகவா சமூக வலைதளங்கள் வந்தன . இல்லவே இல்லை . அதிகார வர்க்கத்தின் குரலுக்கு இணையாக சாமானிய மனிதனின் குரலும் ஒழித்திட வேண்டும் என்பதற்காகத்தானே வந்தன , சமூக வலைதளங்கள் .

ஹனன் விவகாரத்தை ஒரு உதாரணமாக எடுத்துக்கொண்டு அனைவரும் செயல்படுதல் வேண்டும் .

ஹனன் போன்ற பெண்கள் எதற்கும் சளைத்துவிடாமல் செயல்பட வேண்டும் .

 

பாமரன் கருத்து

 

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *