கமல்ஹாசன் பின்வாங்கியது சரியா? நாம் கற்றுக்கொள்ளவேண்டியது என்ன ?

அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் சில நாட்களுக்கு முன்பு பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளிக்கும்போது “கமல்ஹாசன் முன்னால் ஒன்று கூறுவார் பிறகு மாற்றி கூறுவார்” என விமர்சித்தார். அதற்க்கு காரணம் பண மதிப்பிழப்பு (Demonetization) நடந்த பொழுது கமல் அதற்க்கு ஆதரவாக தனது கருத்தினை பதிவு செய்திருந்தார். கமல் மட்டுமல்ல இந்தியாவின் பிரபலங்கள் பலரும் இதற்க்கு ஆதரவு தெரிவித்து இருந்தனர்.

கமலின் ஆதரவு : 

பண மதிப்பிழப்பு (Demonetization) நடந்த போது “திரு மோடி அவர்களே உங்களின் இந்த நடவடிக்கை கட்சிகளை கடந்து பாராட்டப்படவேண்டியது. குறிப்பாக வரி செலுத்துவோரின் பாராட்டுதலுக்கு உரியது” என ஆதரவு தெரிவித்தார்.

ஆதரவு வாபஸ் : 

கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஆனந்த விகடனில் அவர் எழுதிவரும் தொடரில் “பணமதிப்பு நீக்கம் (demonetisation) பற்றி மாண்புமிகு பிரதமர் மோடி அறிவித்தபோது, கட்சி வரையறைகள் கடந்து இச்செயல் பாராட்டப்படவேண்டும் என்று ட்விட்டரில் என் கருத்தை வெளியிட்டேன். கறுப்புப்பணத்தை ஒழிப்பதற்கான ஒரு வழி என்ற முறையில், முழு ஆதரவையும் அத்திட்டத்துக்குத் தருவது மட்டுமன்று, அதனால் விளையும் சிறு இடைஞ்சல்களையும் மக்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்றே நான் நினைத்தேன். ஆனால், என் சகாக்கள் பலரும்,  பொருளாதாரக் கல்வி பெற்ற சிலரும் அலைபேசியில் கூப்பிட்டு, என் ஆதரவுக்கு எதிராகத் தங்களின் கடும் விமர்சனங்களை முன்வைத்தார்கள்.

கொஞ்சநாள் கழித்து, டீமானிடைசேஷனை நடைமுறைப்படுத்திய விதம் பிழையானது; ஆனால், யோசனை நல்ல யோசனைதான் என்று மனதைத் தேற்றிக்கொண்டேன். அதற்கும் பிற்பாடு, பொருளாதார வல்லுநர்களின் விமர்சனக்குரல்கள் வலுத்தன. சரி, சில திட்டங்கள் நல்ல எண்ணத்துடன் செய்யப்பட்டாலும் நடைமுறையில் தோல்வியுறும் என்று நினைத்துக்கொண்டேன்.

தற்போது, `யோசனையே கபடமானது’ என்பது போன்ற உரத்த குரல்களுக்கு அரசிடமிருந்து பலவீனமான பதில்களே வரும்போது சந்தேகம் வலுக்கிறது. திட்டத்துக்குப் பாராட்டு சொன்னதில் சற்றே அவசரப்பட்டுவிட்டதற்காக, பகிரங்கமாக மன்னிப்பு கேட்கக் கடமைப்பட்டிருக்கிறேன். தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்தான் என்று அடம்பிடிக்காமல் தவற்றை ஒப்புக்கொண்டால், பிரதமருக்கு என்னுடைய இன்னொரு சலாம் காத்திருக்கிறது. தவறுகளைத் திருத்தி ஆவன செய்வதும், முக்கியமாக அதை ஒப்புக்கொள்வதும் பெருந்தலைவர்களுக்கான அடையாளம்” என்றுள்ளார்.

சரியா ? தவறா ? 

தான் எடுத்த ஒரு முடிவு தவறானது என தெரியும் போது அதற்காக வருந்துவதும் அதற்க்கு அளித்த ஆதரவை திரும்ப பெறுவதும் அதை மக்களிடம் வெளிப்படையாக கொண்டுசேர்ப்பதும் மிக சிறந்த நற்பண்பு.

தான் செய்தது தவறு என தெரிந்தும் மழுப்பிக்கொண்டே இருப்பதும் சொன்னதையே சொல்லிக்கொண்டு இருப்பதும் நல்ல மனிதருக்கு அழகல்ல.

இதனை நம் அரசியல் கட்சி தலைவர்கள் உணருவார்கள். இந்த நற்பண்பை நாமும் பின்பற்றினால் கூட தவறில்லை.

நன்றி
பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *