உயர்த்தப்படும் பெண்களுக்கான திருமண வயது 21, நல்லதா? காரணம் என்ன? சட்டசிக்கல் என்ன?

ஆண்களுக்கான திருமண வயது 21 ஆகவும் பெண்களுக்கான திருமண வயது 18 ஆகவும் இருந்துவரும் சூழலில் பெண்களுக்கான திருமண வயதை 21 ஆக உயர்த்தும் முடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருக்கிறது. விரைவில் இது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பெண்களின் திருமண வயதை உயர்த்துவதன் மூலமாக அவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னேற்றம் ஏற்படும் எனவும் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் இளம்வயதிலேயே தாய்மை அடைதல் உள்ளிட்ட சிக்கல்களை தடுக்க முடியும் என்ற அடிப்படையில் இந்த வயது உயர்வு கொண்டுவரப்படுகிறது. ஆனால், ஏற்கனவே பல்வேறு மத சட்டங்கள் நடைமுறையில் இருக்கும் இந்தியாவில் இந்த சட்டம் எப்படி இயற்றப்பட இருக்கிறது என்பதையும் இது சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்தும் பேசுவது அவசியம்.

Read more

யார் இந்த அயோத்திதாசர்? அம்பேத்கார், பெரியாரின் முன்னோடி எப்படி?

தமிழ் மொழி காட்டுமிராண்டி மொழி என பெரியார் கூறியது மட்டும் தான் தற்போது பெரிதும் பேசப்படுகிறது. ஆனால் தமிழர்கள் மீதான கோபத்தினால் “ஒரு பைசாத் தமிழன்” என்ற பத்திரிக்கையே நடத்தினார் அயோத்திதாசர். இந்தப்பெயருக்கு அவர் சொன்ன காரணம் “”ஒரு நயா பைசாவுக்குக் கூட தகுதியில்லாதவனாகத் தமிழன் இருந்துவருகிறான்” என்பது தான். ஒரு பொய்யை அல்லது புரட்டை ஆதாரபூர்வமாக நிறுவுவது தான் சிறந்தது என்பதை உணர்ந்து இருந்தார் அயோத்திதாசர். ஆகவே தான் அவர் அனைத்தையும் ஆராய்ச்சிகள், ஆய்வுகள் மூலமாக வெளிக்கொண்டு வந்தார். உதாரணத்திற்கு, கார்த்திகை தீபம், தீபாவளி, பொங்கல், திருமணச் சடங்கு, இறுதிச் சடங்கு உள்ளிட்ட சடங்குகள் எல்லாம் பவுத்தம் வசம் இருந்தவை என்றும் காலப்போக்கில், இவையெல்லாம் எப்படி இந்துமயமானது என்பதையும் விளக்கி எழுதினார். இவையெல்லாம் அப்போதைய காலகட்டங்களில் பெரும் விவாதப்பொருளாக விளங்கியவை.

Read more

“ஜெய்பீம்” என்பதற்கு பின்னால் இருக்கும் வரலாறு

“ஜெய்பீம்” என்ற வார்த்தையை தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் முஸ்லீம் சிறுபான்மையின மக்கள் தற்போது அதிகம் பயன்படுத்துகிறார்கள் என்பதற்காக இந்த வார்த்தை ஒருவித அடையாளத்தோடு பார்க்கப்படுகிறது. அதேபோல, அறிஞர் அம்பேத்கார் அவர்களை பின்பற்றுகிறவர்கள் தான் இந்த வார்த்தையை பயன்படுத்துவார்கள் என்ற மேம்போக்கான எண்ணமும் தற்போது இருக்கிறது. ஜெய் ஹிந்த் என்றால் எப்படி நமக்குள் ஓர் உணர்வு பிறக்கிறதோ அதனைப்போலவே “ஜெய்பீம்” என்றால் ஒரு ஆற்றல் பிறக்கும் என்கிறார்கள். நீங்கள் எந்த சாதியாக, மதமாக, இனமாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் நீங்கள் அடிமைப்படுத்தப்படுவதாக உணர்ந்து அதனை எதிர்த்து போராட வேண்டும் என்ற எண்ணம் கொண்டால் உங்களுக்கு உணர்ச்சிப்பிழம்பை உண்டாக்கும் வல்லமை கொண்ட சொல்லாக “ஜெய்பீம்” இருக்கும்.

Read more

பட்டாசு தடை…. காலத்தின் கட்டாயமா?

பட்டாசு வெடிக்கும் நேரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் சில இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இது தமிழக மக்களிடையே பெரிய கேள்விகளையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சில தகவல்களை

Read more

பாரதியார் : அப்போது யாரும் கண்டுகொள்ளவில்லை ஆனால் இப்போது…

ஒரு சிறந்த சாதனையாளருக்கு சமூகம் செய்யக்கூடிய சிறந்த அங்கீகாரம் என்பது அவர் உயிரோடு இருக்கும் போதே அவரது சாதனைக்கான பாராட்டையும் அங்கீகாரத்தையும் வழங்குவது தான். ஆனால் நாமோ

Read more

யார் இந்த தலிபான்கள்? தலிபான்கள் வரலாறு என்ன?

ஒரு துப்பாக்கியின் விலையே சில பத்தாயிரங்கள் இருக்கும் சூழ்நிலையில் உயர்ரக துப்பாக்கிகள், கணக்கில் இல்லாத வெடிகுண்டுகள், ராக்கெட் லாஞ்சர்கள், டேங்கிகள் என ஒரு ராணுவத்திடம் இருக்கும் அனைத்தும் ஒரு போராட்ட குழுவிடம் எப்படி இருக்க முடியும் என யோசித்துப்பாருங்கள். ஏதாவது ஒரு நாட்டில் இப்படி ஆயுதங்களோடு ஒரு போராட்டக்குழு செயல்பட முடியும் என்றால் அதற்கு ஏதோ ஒரு வல்லாதிக்க நாடு நிச்சயமாக உதவி செய்திருக்கும் என்பதை புரிந்துகொள்ளுங்கள். இப்போது வாருங்கள், தலிபான்கள் வரலாறுக்கு போவோம்.

Read more

அனைவரும் அர்ச்சகர் ஏன் அவசியமானது? கடந்து வந்த சரித்திரம்

இந்த மாற்றம் ஒவ்வொரு வேலையிலும் நடக்க வேண்டும். தற்போதைய சூழ்நிலையில், பணம், படிப்பு, திறமை இருந்தால் யாரும் எந்த வேலையையும் செய்திட முடியும். ஆனால், நாம் உடைக்க முடியாதது கோவில் கருவறைக்குள் குறிப்பிட்ட பிரிவினர் தான் செல்ல முடியும் என்ற விதியைத்தான். காலம் காலமாக இவ்விதி கடைபிடிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் அதனை உடைத்தெறிந்து அனைத்து சாதியினரும் முறையான பயிற்சி பெற்றால் அர்ச்சகரும் ஆக முடியும் என்பது மிகவும் முக்கியமாக செய்திட வேண்டிய காரியமாக இருந்து வந்தது.

Read more

ஒலிம்பிக்கில் பதக்கம் பெற இந்தியா தத்தளிப்பது ஏன்? உள்ளார்ந்த அலசல்

இந்தியா 1900 இல் இருந்து இதுவரைக்கும் இந்தியா 9 தங்கப்பதக்கங்களை மட்டுமே வென்றுள்ளது. இறுதியாக, 1964 இல் ஒன்று, 1980 இல் ஒன்று, 2008 இல் ஒன்று இவை தான் அண்மையில் நாம் தங்கப்பதக்கங்கள். பொருளாதாரத்தில் பின்தங்கிய, போர் பதற்றத்திலேயே இருக்கும் நாடுகள் கூட சில தங்கப்பதக்கங்களை பெற்று நமக்கு முன்னே இருக்கும் போது இந்தியா ஒலிம்பிக்கில் பதக்கம் பெற தத்தளிப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது. இதற்கான பதிலை நாம் விரிவாக பார்க்கலாம்.

Read more

இன்றும் நாம் மெக்காலேயின் அடிமை தான்

இந்தியாவின் எந்தவொரு மூலைக்குச் சென்றாலும் அங்கே பேசப்படும் மொழியை விட ஆங்கில மொழிதான் உயர்ந்தது என எண்ணுவார்கள் அங்கே சொந்தமொழி பேசக்கூடிய மக்கள். இதுதான் எதார்த்தம். அதேபோல, ஒவ்வொரு பெற்றோரும் தங்களது பிள்ளை ஆங்கில வழிக்கல்வி கற்றால் எளிதில் முன்னேறிவிடுவான், அதுவே கவுரவம் எனவும் நினைக்கிறார்கள். இந்த இரண்டு எண்ணவோட்டங்களும் நாம் மெக்காலேயின் அடிமைகளாக இருப்பதற்கு ஆகப்பெரும் சான்று.

Read more

மீராபாய் சானுவின் வெற்றிக்கதை உங்களுக்காக… Video

மீராபாய் க்கு ஆர்ச்சர் ஆக வேண்டும் என்பது தான் ஆசை. ஆனால் தங்கள் பகுதியை சேர்ந்த குஞ்சராணி தேவி என்ற பளுதூக்கும் வீராங்கனை பற்றி படித்தபிறகு பளு தூக்குதலில் விருப்பம்கொண்டார் .விருப்பத்தை அம்மாவிடம் சொல்ல அம்மாவும் ஒப்புக்கொண்டார். மீராபாய் பளுதூக்கும் பயிற்சியை பெறத்துவங்கினார். 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம் வெற்றபிறகு இவர் மீதான கவனம் அதிகரித்தது.

Read more