விவேகானந்தர் – ஜேம்ஷெட்ஜி டாடா சந்திப்பு எப்படி இந்தியாவையே புரட்டிப்போட்டது?

உலக அளவில் சிறந்த தொழில்நுட்ப ஆய்வு நிறுவனமாக விளங்கி வருகிறது இந்தியன் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் [Indian Institute of Science (IISC)]. இதனை உருவாக்கிட அடித்தளமிட்டவர் ஜேம்ஷெட்ஜி டாடா. ஆனால் அவருக்கு அத்தகைய எண்ணத்தை விதைத்தவர் சுவாமி விவேகானந்தர். ஆச்சர்யமாக உள்ளதா? இருவரின் சந்திப்பு இந்திய தொழில்நுட்பத்துறையில் பெரிய மாற்றத்தை உண்டாக்கியது.

Read more

அம்பேத்கர் ‘அறிவின் சின்னம்’ என ஏன் அழைக்கப்படுகிறார்? | Symbol of Knowledge

கல்வி என்பது குறிப்பிட்ட சமூகத்திற்கு இல்லை என மறுக்கப்பட்டு வந்த காலகட்டத்தில் அங்கே பிறந்த ஒரு குழந்தை கல்வியின் பால் பெரிய ஈர்ப்பு கொண்டு புத்தகங்களை வாசித்து தள்ளியது. கணக்கில் இல்லாத பட்டங்களை பெற்று தீர்த்தது. அறிவின் சின்னம் நீ தான் [Symbol of Knowledge] என உலகம் போற்றும் அளவிற்கு அறிவால் உயர்ந்து நின்றது. அந்தக் குழந்தை வேறு யாருமல்ல ‘பாபாசாகிப் அம்பேத்கர்’ தான்.

Read more

திரு.ராம்நாத் கோவிந்த் – சுயசரிதை, வாழ்க்கை வரலாறு, அரசியல் பயணம், குடும்பம்

இந்தியாவின் 14வது குடியரசுத்தலைவராக பதவியேற்றுக்கொண்ட திரு ராம்நாத் கோவிந்த் அவர்கள் அடிப்படையில் ஒரு வழக்கறிஞர், வழக்கறிஞராக நீண்ட காலம் பணியாற்றியவர், பீகார் மாநிலத்தின் ஆளுநராக பதவி வகித்தவர், ராஜ்யசபாவின் உறுப்பினராக இருமுறை பதவி வகித்த காலத்தில் பல்வேறு நாடாளுமன்ற குழுக்களில் அங்கம் வகித்து சிறப்பாக செயலாற்றிவர், ஏழை எளிய மக்களுக்காக சட்டபூர்வ உதவிகள் பல புரிந்தவர் என பல்வேறு சிறப்புக்களோடு இந்தியாவின் முதல் குடிமகன் பதவியை அலங்கரித்து வருவபர் தான் திரு. ராம்நாத் கோவிந்த் அவர்கள். அவரைப்பற்றி விரிவாக அறிவோம் வாருங்கள்.

Read more

1 மாணவருக்காக 50KM பயணித்து பாடம் நடத்தும் ஆசிரியர், பிறகு நடந்த பெரிய மாற்றம்

மகாராஷ்டிராவின் புனே நகரத்திலிருந்து ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் ஜந்தர் என்ற இடத்திற்கு அருகே செல்வதற்கு சரியான சாலைவசதியோ மின்சார வசதியோ இல்லாத கிராமம் இருக்கின்றது . அந்த கிராமத்தில் இருக்கும் பள்ளிக்கு ஆசிரியராக நியமிக்கப்பட்டார் ரஜினிகாந்த் மேண்டே . 2010 இல் இவர் பணிக்கு சேரும் நேரத்தில் சுற்றுவட்டாரத்தில் இருந்து 12 மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர் . 

Read more

ஒருநாள் முதல்வர் : யார் அந்த சிருஷ்டி கோஸ்வாமி? | One Day CM Srishti Goswami

ஜனவரி 24 [ஞாயிற்றுக்கிழமை] ஒருநாள் முதல்வராக பணியை துவங்கினார் சிருஷ்டி கோஸ்வாமி. தான் முதல்வராக பணியாற்றிய தருணத்தில் மாநிலத்தில் நடைபெறும் குற்றங்களை எடுத்துரைத்த போது சமூகத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் குற்றங்களுக்கு எதிராக கடுமையாக நடவெடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். இதுதவிர மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டு இருக்கும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும் அவர் ஆய்வு செய்தார்.

Read more

மருத்துவர் சாந்தா : புற்றுநோயாளிகளுக்கு கரம் கொடுத்த கடவுள்| Dr V Shanta

மருத்துவமனைகள் பல கட்டி கோடீஸ்வர மருத்துவர்களுக்கு கிடைக்காத அங்கீகாரம் சேவை மனப்பான்மை கொண்ட மருத்துவர் சாந்தா அவர்களுக்கு கிடைத்தது. ஆமாம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ‘உயர்தர புற்றுநோய் சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்வதற்கான சிறந்த முயற்சிகளுக்காக டாக்டர் வி. சாந்தா நினைவுகூரப்படுவார். சென்னை அடையாரில் உள்ள புற்றுநோய் மருத்துவமனை ஏழைகளுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் சேவை செய்வதில் முன்னணியில் உள்ளது. 2018ஆம் ஆண்டு நான் அங்கு சென்றதை நினைவுகூர்கிறேன். மருத்துவர் வி. சாந்தாவின் மறைவை எண்ணி வருந்துகிறேன்’ என தெரிவித்தார்.

Read more

அடால்ஃப் ஹிட்லர் பற்றி அறியாத 10 தகவல்கள் | 10 Interesting Facts About Adolf Hitler

லட்சக்கணக்கான யூதர்களை கொன்று குவித்த ஹிட்லர் ஒரு வெஜிடேரியன் என்பது ஆச்சர்யமான தகவல். மனிதர்களை கொல்வதற்கு கொஞ்சமும் இரக்கமில்லாமல் செயல்பட்ட ஹிட்லர் விலங்குகளை கொல்ல மனமில்லாமலா வெஜிடேரியன் ஆனார் என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழலாம். தன்னுடைய இளம் பருவத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட பெண் நண்பர் ஒருவரின் பிரேத பரிசோதனையின் போது சாட்சிக்காக அவர் உடன் இருந்தார். அதனைக் கண்ட பிறகு தான் வெஜிடேரியன் என்ற நிலைக்கு அவர் மாறினார்.

Read more

11 மாத பிரதமர் வி.பி. சிங் இன்றளவும் கொண்டாடப்படுவது ஏன்?

உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் உள்ள தையா என்கிற ஒரு ராஜ குடும்பத்தில் 1931-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி பிறந்தார். மண்டா சமஸ்தானத்தின் மன்னர் ராஜ்பகதூர், தனது வாரிசாக சிறு வயதான வி.பி.சிங்கை தத்தெடுத்துக்கொண்டார். விஸ்வநாத் பிரதாப் சிங் என்பதனை வி.பி.சிங் என அழைத்துவந்தார்கள். படிப்பில் நல்ல கெட்டிக்காரராக விளங்கிய வி பி சிங் எதிர்காலத்தில் மிகப் பெரிய அணு விஞ்ஞானி ஆக வேண்டும் என்ற லட்சியத்துடனேயே படித்து வந்தார். ஆனால் காலம் அவரை அரசியலுக்கு அழைத்து வந்தது.

Read more

எம்லைன் பங்கர்ஸ்ட் : பெண்கள் வாக்குரிமைக்காக போராடி வென்ற பெண் | Emmeline Pankhurst (1858 – 1928)

பெண்களுக்கு வாக்குரிமை கொடுக்க வழிவகை செய்திடும் சட்டம் முதன் முதலாக செப்டம்பர் 19,1893 அன்று நியூஸிலாந்து [New Zealand] நாட்டில் தான் கொண்டுவரப்பட்டது. உலகிலேயே முதல் முறையாக பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை கொடுத்த நாடு என்ற பெருமையை நியூஸிலாந்து நாடு இதன் மூலமாக பெறுகிறது. 1902 இல் ஆஸ்திரேலியா, 1906 இல் பின்லாந்து, 1913 இல் நார்வே, 1915 இல் டென்மார்க் என ஒவ்வொரு நாடும் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை கொடுத்து வந்தது. அண்மையில் 2011 ஆம் ஆண்டு தான் சவூதி அரேபியாவில் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது.

Read more

மேதகு பிரபாகரன் ஆயுதமேந்தியது ஏன்?

1972 ஆம் ஆண்டு பிரபாகரனுக்கு வயது பதினாறு. அப்போது பிரபாகரன் அவர்களின் அக்காவின் திருமணம் நடைபெற்றது. திருமண நிகழ்விற்கு ஊரே கூடியிருந்த போதும் பிரபாகரன் எங்கோ சென்றுவிட்டு தாமதமாகவே வந்து சேர்ந்தார். நண்பர்களுடன் வெறுமனே ஊர் சுற்றும் சிறு பிள்ளையென்றால் பரவாயில்லை, ஆனால் பிரபாகரன் ஏதோ ஒரு காரணத்தோடு தான் ஊர் சுற்றுகிறார் என்பது தெரிந்தபடியால் வேலுப்பிள்ளை கவலையாகவே இருந்தார்.

Read more