விழித்துக்கொள் பெண்ணே

உலகாளும் திறமை இருந்தாலும்

ஒதுக்கி தள்ளிவிட்டு அவள் ஆள

ஆண் ஆதிக்கம் அன்போடு

அளித்தது சமையலறை மட்டுமே

கல்வியறிவு கொட்டி கிடந்தும்

வேலை சிறக்க செய்திருந்தும்

உயர்வு அழகால் கிடைத்ததென்று

வாய்பேசி மகிழும் சந்தர்ப்பவாத சமூகம்

கோவில்களில் தெய்வமாகவும்

கற்பின் அர்த்தமாகவும்

பொய்யான முதன்மையோடு

புதைத்து வைத்தது புது சமூகம்

அழகில் சிறந்தவள்

ஆடவன் அறையிலும்

அறிவில் உயர்ந்தவள்

அடுப்பாங்கரையிலும்

அடங்கி கிடப்பது

அறியாமையா ?

அடக்குமுறையா ?

எப்போது விழிக்க போகிறாய் பெண்ணே!!!


Get updates via WhatsApp





எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *