ஊடகத்தின் செயல்பாடுகளில் மாற்றம் வேண்டும்

 இன்று மாலை பிரபல செய்தி சேனலில்  வீணாகும் இயற்கை பொருள்களைக்கொண்டு மின்சாரம் தயாரிக்கும் இயந்திரம் தொடர்பான சந்தேகங்களை மாணவர்கள் பொதுமக்களுக்கு விளக்கிக்கொண்டு  இருந்தனர் .

எலுமிச்சையும் வேப்பமரம் சார்ந்த பொருள்களை மட்டும் போடக்கூடாது என விளக்கம் சொன்னனர் .

திடீரென்று துரித செய்தியாக H ராஜா அவர்கள் சாரண சாரணியர் தேர்தலில் தோற்றுவிட்டதாக செய்தி ஒளிபரப்பானது .

தேர்தல் முடிவுகளை சொன்ன தேர்தல் அதிகாரி திலகவதி  உண்மையை சொன்னார் , ஆம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்தமுறை சாரண சாரணியர் தேர்தலுக்கு அதிக முக்கியத்துவம் அளித்த ஊடகங்களுக்கு நன்றி என்றார் .

அவர் சொன்னது முற்றிலும் உண்மை , இந்தமுறை முக்கியத்துவம் அளித்ததற்கு  காரணம் H ராஜா என்றொருவர் போட்டியிட்டதே காரணம் .

இதற்கு மட்டுமல்ல , அதிமுக அணிகளில் யார் பேசினாலும் அது துரித செய்தியாகிவிடுகின்றது . அதிமுக அணிகளுக்குள் நடப்பதை ஊடகங்கள் தங்களுக்கு இரையாக்கிக்கொண்டு வாழ்ந்து வருகின்றன என்பதே உண்மை .

மக்களுக்கு அவசியமானதை  சொல்லும் கடமை ஊடகங்களுக்கு  இருக்கின்றது …அதை ஊடகங்கள் உணரவேண்டும் .

பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *