அம்மா எனும் இயற்கை அதிசயம் – கவிதை | Amma Kavithai

அம்மா எனும் இயற்கை அதிசயம் – கவிதை

மேலும் பல கவிதைகள் இங்கே

மேகங்கள் எதையும் 

எதிர்பார்த்து பொழிவதில்லை 

“மழையாய்”

காற்று எதையும் 

எதிர்பார்த்து வீசுவதில்லை 

“தென்றலாய்”

பூமி எதையும் 

எதிர்பார்த்து சுற்றுவதில்லை 

“நிதானமாய்”

சூரியன் எதையும் 

எதிர்பார்த்து உதிப்பதில்லை 

“உறுதியாய்”

அம்மா எதையும் 

எதிர்பார்த்து வழங்குவதில்லை 

“அன்பாய்”

உணர்வற்ற எந்திரமும் 

உயிர்வந்தால் சுயநலமாய் 

சிந்திக்க துவங்கிடும் 

சுயநல உலகினிலே 

எள்ளளவும் சுயமென 

சிந்திக்காமல் வாரிவழங்கும் 

அம்மா என்றென்றும் 

இயற்கை அதிசயமே !

அண்மையில் அம்மா கல்லறை கவிதை ஒன்றினை இந்த இணையத்தில் படித்தேன். நன்றாக இருந்தது நீங்களும் படிக்கலாம்

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *