ஞாயிற்றுக்கிழமையை நல்லமுறையில்  செலவிடுவது எப்படி ?

ஞாயிற்றுக்கிழமை என்றாலே 9 அல்லது 10 மணிவரை உறங்கிவிட்டு , எழுந்துரிப்போமா வேண்டாமா என பலமுறை யோசித்துவிட்டு எழுந்து நேரடியாக மதிய சாப்பாட்டை முடித்து மீண்டும் படுத்து தூங்கி திங்கள்கிழமையை பற்றி நினைத்துக்கொண்டு பொழுதை கழிப்பதே நம்மில் பெரும்பாலானோர் செய்யும் செயலாகிவிட்டது .

வாரம் முழுவதும் கடினமாக வேலைசெய்துவிட்டு கிடைக்கும் ஒரே விடுமுறைநாளில் ஓய்வை தவிர வேறென்ன செய்ய முடியும் என நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது .

வாரம் முழுவதும் யாருக்காகவோ வேலை செய்கின்ற நாம் , கிடைக்கும் ஒரே விடுமுறை நாளை நமக்கான நாளாக மாற்றிவிட்டால்   நன்றாக இருக்குமே என்பது என் கருத்து .

தனிமையில் கொஞ்சநேரம் இருங்கள் :

தனிமை ஒவ்வொரு மனிதனுக்கும் அற்புத சக்தியை கொடுக்க கூடியது . ஞாயிற்றுகிழமை காலையில் எழுந்து கொஞ்சநேரம் அமைதியாக இந்த நாளை நான் எனக்காக செலவிட போகிறேன் என நினைத்துக்கொள்ளுங்கள்  .

தொடர்ச்சியாக வேலை செய்த களைப்பினால் வறட்சியில் காய்ந்திருக்கும் உங்கள் மூளைக்கு இந்த அமைதி ஈரப்பதத்தை கொடுக்கும் . இனிமையாக அந்த நாளை தொடங்க புத்துணர்ச்சி கொடுக்கும் .
ஆர்வமுள்ள செயல்களில் ஈடுபடுங்கள் :

இன்றைய தலைமுறையினரின் மிகபெரிய பிரச்சனை வேலையை தவிர வேறு எதுவுமே செய்யாமலிருப்பது தான் . பலரிடம் கேட்டால் “வேலை செய்வதற்க்கே நேரம் போதவில்லை ” என்கிறார்கள் . இதுதான் நம்மில் பலரின் பிரச்சனை .

குறைந்தபட்சம் உங்களுக்கு பிடித்தமான ஏதாவது ஒரு செயலை செய்ய பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள் . அது விளையாட்டாகவோ எழுத்துவதாகவோ , படிப்பதாகவோ என எதுவாக வேண்டுமானலும் இருக்கலாம் .
உடற்பயிற்சி செய்யுங்கள் :

உழைத்து களைத்துப்போன உடலுக்கு புத்துணர்ச்சி கொடுக்க சிறிது உடற்பயற்சி எடுத்துக்கொள்ளுங்கள் .
திருமணமானவராக இருந்தால் உங்கள் மனைவியோடு சிறிது தூரம் நடக்கலாம் . குழந்தை இருப்பின் குழந்தையோடு விளையாடலாம் .

பேசுங்கள் பழகுங்கள் :

நட்பு வட்டத்தை  வடிவமைத்துக்கொள்ளுங்கள் . அவர்களோடு சிறிது உரையாடுவது ஏதேனும் நல்ல காரியங்களை செய்வது என உங்களை இணைத்துக்கொள்ளுங்கள் .

குறைந்தபட்சம் ஒரு புது மனிதரையாவது சந்தியுங்கள்  .

அடுத்த வாரத்திற்கு தயாராகுங்கள் :

ஞாயிற்றுக்கிழமையை ஓய்வுநாளாக கடந்துவிட்டு படபடப்போடு திங்கட்கிழமை ஓடினால் அந்த வாரமே அமைதியற்று போகும் . ஆகையால் அடுத்த வாரத்திற்கு தயாராக சில முன்னேற்பாடுகளை செய்து வைத்துக்கொள்ளுங்கள் .

துணியை தேய்த்து வைப்பது , பைல்களை எடுத்து வைப்பது போன்ற முன்னேற்பாடுகளை செய்யலாம் .

இந்த ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் .

நன்றி

பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *