குழந்தைகளின் கல்வியில் கண்மூடித்தனமாக முதலீடு செய்வது சரியா?

இந்தியப்பெற்றோர்கள் அதிலும் குறிப்பாக தமிழகத்தில் இருக்கும் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் படிப்பிற்காக தங்களது அன்றாட வருமானம், சேமிப்பு அனைத்தையும் செலவு செய்கின்றனர். அதேபோல பிள்ளைகளின் கல்விக்காக கடன் வாங்கும் பெற்றோர்களின் எண்ணிக்கையும் கணிசமாகவே அதிகம் தான். இதில் ஒரு சிறப்பம்சம் இருக்கிறது, சில பத்தாண்டுகளுக்கு முன்பு அடுப்பூதும் பெண்களுக்கு எதற்கு கல்வி என கேட்டவர்களும் கூட இன்று பெண் பிள்ளைகளையும் உயர் படிப்புகள் வரை படிக்க வைக்க நினைக்கிறார்கள். இதற்காக தங்களது தலையையும் அடமானம் வைக்க இந்தியப்பெற்றோர்கள் துணிகிறார்கள்.

Read more