ஆபிரகாம் லிங்கன் கொலை செய்யப்பட்டது ஏன்?

அமெரிக்க உள்நாட்டுப்போர் முடிவடைந்து ஐந்து நாட்களே நிறைவடைந்திருந்த சூழலில், ஏப்ரல் 14, 1865 – புனித வெள்ளியன்று தன் மனைவியுடன் நாடகம் காண சென்றிருந்த ஆபிரகாம் லிங்கன் அவர்கள் ஜான் வில்ஸ் பூத் என்ற புகழ் பெற்ற நடிகரால் சுட்டுக்கொல்லப்பட்டார். கறுப்பின மக்களுக்கு விடுதலை கொடுத்தது பொறுக்காமல் தென் மாநிலங்களின் ஆதரவாளரான பூத் ஆபிரகாம் லிங்கன் அவர்களை சுட்டுக்கொன்றார். மாபெரும் கொடுமைகளை அனுபவித்துவந்த கறுப்பின மக்களுக்கு விடுதலை பெற்றுத்தந்த மாபெரும் தலைவர் என்ற காரணத்திற்காகவே ஆபிரகாம் லிங்கன் இந்த பூமி உள்ளவரைக்கும் நினைவில் வைத்துக்கொள்ளப்படுவார்.

Read more