பாரதியார் ஆங்கிலேயருக்கு மன்னிப்பு கடிதம் எழுதினாரா? அதிர்ச்சி தரும் ஒரு உண்மை

பாரதியார் பற்றி நாம் பெருமைமிகு வரலாற்று விசயங்களை படித்து கொண்டாடி இருப்போம். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான அவரது முழக்கங்கள், கவிதைகள், கட்டுரைகள் என ஒவ்வொன்றும் இந்தியர்களை எழுச்சி அடையச் செய்தது என்றால் மிகையாகாது. ஆனால், நாம் இந்தப்பதிவில் படிக்கப்போகும், ஆங்கிலேய காலத்திய சென்னை மகாண கவர்னருக்கு பாரதியார் எழுதிய கடிதம் அவர் மீது நாம் கொண்டிருந்த கருத்தில் மாபெரும் பின்னடைவை ஏற்படுத்தலாம். எழுச்சிமிகு எழுத்தாளர் பாரதியாரா இப்படியொரு கடிதத்தை எழுதினார் என நம்மை நினைக்க வைக்கலாம், எத்துனை மன உறுதி கொண்டவரையும் ஆங்கிலேயே அடக்குமுறை எவ்வாறு முடக்கி போட்டுள்ளது என்பதையும் உணர வைக்கலாம்.

Read more

பாரதியார் கவிதைகள் : பாரத தேசம் – உரை விளக்கம்

பாரதியார் வாழ்ந்த நாட்கள் என்பது அவ்வளவு சுகமான நாட்கள் அல்ல என்பதை நாம் புரிந்துகொண்டு தான் பாரதியாரின் கவிதைகளை வாசித்தால் அன்றைய இந்தியாவின் சூழல், அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட துயரங்கள், அவருடைய தேசப்பற்று, தன் தேசம் எப்படி இருக்க வேண்டும் என்கிற விசாலமான பார்வை நமக்கு எளிதில் புலப்படும். பாரதியார் கவிதைகளுக்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆசிரியர் திரு வை.ஏ. மூர்த்தி அவர்கள் சிறப்பான உரை விளக்கம் எழுதி இருக்கிறார். பாரதி பாடல்கள் உரை விளக்கம் என்ற அந்த புத்தகம் மிகவும் பழமையான புத்தகம். அதை நான் படித்து மகிழ்ந்தது போல நீங்களும் படித்து மகிழ்வுற வேண்டும் என்ற நோக்கில் உங்களுக்கு அதை இங்கே தருகிறேன்.

Read more

பாரதியார் : அப்போது யாரும் கண்டுகொள்ளவில்லை ஆனால் இப்போது…

ஒரு சிறந்த சாதனையாளருக்கு சமூகம் செய்யக்கூடிய சிறந்த அங்கீகாரம் என்பது அவர் உயிரோடு இருக்கும் போதே அவரது சாதனைக்கான பாராட்டையும் அங்கீகாரத்தையும் வழங்குவது தான். ஆனால் நாமோ

Read more

பாரதியார் – பாரத தேசம் கவிதை : எப்படியெல்லாம் கனவு கண்டிருக்கிறார் பாரதி

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம் – அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்கு வோம், எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

Read more

தேடி சோறு நிதம் தின்று – பாரதி பிறந்தநாள் பகிர்வு

தேடிச் சோறுநிதந் தின்று — பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி — மனம்
வாடித் துன்பமிக உழன்று — பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து — நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி — கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் — பல
வேடிக்கை மனிதரைப் போலே — நான்
வீழ்வே னன்றுநினைத் தாயோ?

Read more