LGBTQ என்றால் என்ன? LGBTQ In Tamil

ஜூன் மாதத்தின் முதல் வாரம் LGBTQ சமூகத்திற்கான சிறப்பு வாரமாக கொண்டாடப்படுகிறது. அதனை ஒட்டி சென்னையில் வண்ணமயமான பேரணி LGBTQ அமைப்பினரால் நடத்தப்பட்டது. அதிலே அவர்கள் தங்களுக்கான உரிமை, அங்கீகாரம் குறித்த கோரிக்கைகளை முன்வைத்தார்கள். அவர்களது முக்கிய கோரிக்கையாக இருப்பது என்னவெனில் “தங்களை சக மனிதர்களாக நடத்த வேண்டும்” என்பது தான். பல உலக நாடுகளில் இவர்களுக்கான சமூக அங்கீகாரம் வேகமாக கிடைத்து வருகிறது. ஆனால், இந்தியாவில் இந்த மாற்றம் மெதுவாகவே நடந்து வருகிறது. LGBTQ வில் இருப்பவர்கள் குறித்த புரிதல் பரவலாக நடந்தால் மட்டுமே இந்த சமூகம் மாற்றம் அடையும். அதற்கான ஒரு முயற்சியே இந்தப்பதிவு.

Read more

இளையராஜாவும் எம்பி பதவியும் | விமர்சிப்போர் தவறாமல் படிக்க

இசைஞானி இளையராஜா அவர்கள் மாநிலங்களவையில் நியமன உறுப்பினராக (MP) குடியரசுத்தலைவர் அவர்களால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பாக இளையராஜா அவர்கள் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை அம்பேத்கர் அவர்களோடு ஒப்பிட்டு பேசியது பெரும் விமர்சனத்திற்கு உள்ளான நிலையில் இந்த நியமன பதவி அவருக்கு வழங்கப்பட்டு இருப்பதும் சில விமர்சனங்களை பெற்று தந்துள்ளது. ஆனால், இது விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட வேண்டிய விசயமா அல்லது கடந்து செல்ல வேண்டிய விசயமா என்பதை நாம் விரிவாக பேசலாம்.

Read more

அறம் – ஜெயமோகன் – Tamil Book Download

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய சிறந்த புத்தகங்களில் ஒன்று அறம் புத்தகம். இந்த புத்தகத்தில் 12 சிறந்த கதைகள் உள்ளன. அவை அனைத்துமே படிப்போரை நல்ல வழியில் பயணிக்க வைக்கும் மந்திர வார்த்தைகள் கொண்ட புத்தகம். ஒரு சிறந்த புத்தகத்தை படிக்க நினைக்கும் ஒவ்வொருவரும் வாங்கி படிக்க வேண்டிய புத்தகம் இது. 

Read more

ஒரு பிணந்தூக்கியின் வரலாற்று குறிப்புகள், சாகித்ய அகாடமி விருது வென்ற புத்தகம்

பார்சி சமூகத்தில் பிணம் தூக்கும் பணிகளை செய்யும் விளிம்பு நிலை மக்களின் வாழ்வியல் பற்றி, பிரபல இந்திய நாடக ஆசிரியர் சைரஸ் மிஸ்திரி ஆங்கிலத்தில் எழுதிய நாவல் “Chronicle of a Corpse Bearer” 2015-ம் ஆண்டின் சிறந்த ஆங்கில இலக்கிய புத்தகத்துக்கான சாகித்ய அகாடமி பிரதான விருதை பெற்றது. அதனை மாலன் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்துள்ள “ஒரு பிணந்தூக்கியின் வரலாற்று குறிப்புகள்” என்ற புத்தகத்திற்காக சிறந்த மொழி பெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதை வென்றுள்ளார்.

Read more

அக்னிபாத் திட்டம் என்றால் என்ன? ஏன் கடுமையான எதிர்ப்பு நிலவுகிறது?

இராணுவத்தின் முப்படைகளுக்கும் ஆண்டுக்கு 46,000 வீரர்களை 4 ஆண்டு ஒப்பந்தத்தில் சேர்க்கும் திட்டம் தான் அக்னிபாத் திட்டம். இதன்மூலமாக, இராணுவத்தின் செலவுகளை குறைக்க முடியும் என இந்திய ராணுவம் நம்புகிறது. இதன் குறைபாடுகளை சுட்டிக்காட்டி இந்தியாவின் பல நகரங்களில் இளைஞர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் செய்து வருகிறார்கள். 

Read more

வாழ்க்கையில் ஜெயிக்க கட்டாயம் படிக்க வேண்டுமா? படிக்காமல் சாதித்தவர்கள் இருக்கிறார்களே?

“சாதிக்க படிப்பு அவசியமில்லை” என்கிற பரவலான வாசகத்தை கேட்கும் பல பள்ளி மாணவ மாணவியரும் இளைஞர்களும் “சாதிக்க, வாழ்க்கையில் முன்னேற நன்றாக படிக்க வேண்டிய அவசியமில்லை” என புரிந்துகொள்கிறார்கள். ஆனால், சாதிக்க படிப்பு அவசியமில்லை என்பது கல்வி பயிலும் வாய்ப்புள்ளவர்களுக்காக சொல்லப்பட்டது அல்ல என்பதையும் அது போதிய கல்வி அறிவு பெற முடியாதவர்களும் வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக சொல்லப்பட்டது என்பதையும் மாணவ மாணவியர் உணர வேண்டும்.

Read more

தென்னிந்தியாவின் “லேடி சூப்பர் ஸ்டார்” சாதனை மகத்தானது, நயன்தாரா எப்படி இதை நிகழ்த்தினார்?

ஆண்களை மையப்படுத்திய தென் இந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெறுவது அவ்வளவு எளிதானது இல்லை. ஆனால், அதனை நிகழ்த்திக்காட்டி உள்ளார் நயன்தாரா. இனிவரும் காலகட்டங்களில் இன்னொரு நடிகையால் இதை அவ்வளவு எளிதாக செய்துவிட முடியுமா என தெரியவில்லை. ஆகவே தான் அவரைப்பற்றி எழுத வேண்டிய தேவையும் உள்ளது.

Read more

இந்த 8 நாவல் ஆசிரியர்களின் படைப்புகளுக்கு உங்கள் புத்தக அலமாரியில் இடம் கொடுங்கள் | novel writers in tamil

உலகின் தொன்மையான மொழிகளில் முதன்மையானது நம் தமிழ் மொழி. அதைப்போலவே, தமிழ் இலக்கிய உலகத்திற்கும் பெரிய பாரம்பரியம் உண்டு. காலம் நகர நகர புதிய புதிய வாசிப்பாளர்களையும் எழுத்தாளர்களையும் தமிழ் இலக்கிய உலகம் தன்னகத்தே வாரி அணைத்துக்கொள்கிறது. நீங்கள் தமிழ் இலக்கியத்திற்கு புதியவராக இருந்தால் நீங்கள் நிச்சயம் வாங்கிப்படிக்க வேண்டிய சில தமிழ் நாவல் எழுத்தாளர்களை உங்களுக்கு அறிமுகம் செய்து வைப்பதற்காகவே இந்தப்பதிவு.

Read more

பிரிவினைவாதம் இந்தியாவிற்கு அழகல்ல! நமக்கான இந்தியாவை உருவாக்க நாம் விழித்துக்கொள்வோம்

நபிகள் பற்றிய நிபுர் சர்மாவின் அவதூறு கருத்துக்கு அரபு நாடுகளிடம் இருந்து கடும் கண்டனம் எழுந்துள்ளது. அவர் சார்ந்த பாஜக, இதனை அவரது சொந்தக்கருத்து என சொல்லி அவரது கருத்துக்காக அவரை இடைநீக்கம் செய்தாலும் கூட எதிர்ப்பு என்பது ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் எதிராகவே வந்துள்ளது என்பதை இந்திய மக்கள் ஒவ்வொருவரும் கவனிக்க வேண்டும். இந்தியா என்றால் வேற்றுமையில் ஒற்றுமை நிறைந்த நாடு என்கிற மேன்மைத்தன்மை கொண்டது நம் நாடு. ஆனால் இன்று அந்த நிலமை மெல்ல மெல்ல மாறி வருகிறது. இந்தியாவை சிறுபான்மையினர் மீது வெறுப்புணர்வு கொண்ட நாடாக பார்க்கும் போக்கு ஏற்பட்டுள்ளது. இது மாற வேண்டாமா?

Read more

பாலியல் தொழிலை குற்றமற்றதாக மாற்ற வேண்டியதன் அவசியம் என்ன?

“அவர்கள் பெரிய கார்களில் வருவார்கள். எங்களை ஆசை தீர அனுபவிப்பார்கள். அவர்களின் சந்தோசத்தை கூட்ட எங்களை கடுமையாக அடிக்கவும் செய்வார்கள். அத்தனையும் செய்துவிட்டு எங்களுக்கு கொடுப்பதாக சொன்ன பணத்தையும் கொடுக்காமல் ஓடி விடுவார்கள். இந்த சூழலில், எங்களை தாக்கியதற்கோ அல்லது பணம் கொடுக்காமல் ஏமாற்றியதற்கோ காவல் நிலையத்தில் அவர்கள் மீது எங்களால் புகார் கொடுக்க முடியாது. காரணம், பாலியல் தொழில் செய்வது ஒரு குற்றமாக நம் சமூகத்தில் கருதப்படுகிறது” – பாலியல் தொழில் செய்யும் ஓர் பெண்மணி.

Read more