மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் குறி சொல்லும் தொழில் செய்துவரும் கணேசன் மற்றும் லெட்சுமி ஆகிய இருவருக்கும் 6 பிள்ளைகளில் மூன்றாவது பிள்ளையாக பிறந்தவர் தான் தேவயானி. கொரோனா பிரச்சனையில் பல்வேறு தொழில்களும் முடங்கி இருக்கக்கூடிய சூழ்நிலையில் குறிசொல்லும் பிழைப்போரின் நிலையும் பரிதாபமான சூழ்நிலையை அடைந்திருக்கிறது. அண்மையில் வெளியான 12 ஆம் பொதுத்தேர்வில் தேவயானி 600 க்கு 500 மதிப்பெண்கள் எடுத்து சாதனை புரிந்த செய்தி வெளியானது.
தமிழால் இணைவோம்
