இலங்கை குண்டுவெடிப்பு : மதங்களின் பெயரால் நடக்கும் படுகொலைகள் ஒழியட்டும்

இந்த பதிவினை எழுதிக்கொண்டு இருக்கும் நேரத்தில் இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக உயர்ந்து இருக்கிறது. இந்த எண்ணிக்கை இன்னும் உயரவும் வாய்ப்பிருக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 21) ஈஸ்டர் திருநாள் அன்று மக்கள் கூடும் இடங்களான தேவாலயங்கள், ஹோட்டல்கள் என முக்கியமான இடங்களை குறிவைத்து 8 இடங்களில் தற்கொலைப்படை தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அமைதியான சந்தோச வாழ்வு வேண்டி பிரார்த்தனை செய்து கொண்டிருந்தவர்களின் பிரார்த்தனை முடிவதற்கு முன்பாகவே குண்டுகள் வெடிக்க துவங்கின. அருகில் உயிரோடு இருந்தவர்கள் பலர் சில நொடிப்பொழுதில் ரத்தமும் சதையும் கலந்த பிணமாக சிதறி கிடந்ததை பார்த்தவர்கள் அலறி ஓடினார்கள்.

Read more