ரசவாதி புத்தகம் யார் வாசிக்கலாம்? | The Alchemist Tamil Book Review

ரசவாதி என்கிற புத்தகத்தின் பெயரைப் பார்த்தவுடன் இது ஏதோ மந்திரம் சார்ந்த நூல் என்றோ வேதியியல் சார்ந்த நூல் என்றோ நினைத்துவிட வேண்டாம். வாழ்க்கையின் விளிம்பு நிலையில் யாருடைய ஆதரவும் இல்லாது இருந்தாலும் குறிக்கோளில் ஆழமான காதலும் அடைய முடியும் என்கிற நம்பிக்கையும் இருந்தால் உங்களுக்கு உதவிட இந்த பிரபஞ்சமே வரிந்து கட்டிக்கொண்டு வரும் என்பதை நிரூபிக்கும் ஒரு நாவல் தான் இந்தப்புத்தகம். நிச்சயமாக உங்களது அலமாரியை அலங்கரிக்க வேண்டிய ஒரு புத்தகம் தான்.

Read more

மரப்பாச்சி சொன்ன ரகசியம் | குழந்தைகள் பெற்றோர்கள் படிக்க வேண்டிய புத்தகம்

சுருக்கம் : ஒரு குழந்தை தனக்கு நடந்ததை தனது பெற்றோர், ஆசிரியர் ஆகியோரிடத்தில் எந்தவித அச்சமும் தயக்கமும் இன்றி தைரியமாக சொல்லும் மன பக்குவத்தோடு வளர்க்கப்பட்டால் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை தடுக்க முடியும் என்ற கருத்தை விதைக்கிறது மரப்பாச்சி சொன்ன ரகசியம் புத்தகம்

Read more

“உங்களில் ஒருவன்” புத்தகம் | திமுகவினர் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம் | விலை ரூ 500

தற்போது தமிழக முதல்வராக இருக்கக்கூடிய திரு முக. ஸ்டாலின் அவர்கள் அண்மையில் அவரது சுயசரிதையின் முதல் பாகத்தை வெளியிட்டார். அதிலே அவரது பள்ளி துவங்கி கல்லூரி காலங்கள், இளமைப்பருவம், அரசியல் துவக்கம், திருமண வாழ்க்கை, மிசா போராட்டம் என அவரது 23 ஆண்டுகால நினைவுகளை பகிர்ந்துள்ளார். பூம்புகார் பதிப்பகம் வெளியிடும் இந்த நூலின் விலை ரூ 500. குறிப்பாக, திமுக உறுப்பினர்கள் தங்களது தலைவரின் ஆரம்பகால வாழ்க்கை பற்றி அறிந்துகொள்ள நினைத்தால் அதற்கான நல்வாய்ப்பாக இந்தப் புத்தகம் இருக்கும்.

Read more

“காஃப்கா எழுதாத கடிதம்” வாசிக்க வேண்டிய சிறந்த புத்தகம் | எஸ்.ராமகிருஷ்ணன்

உலகப் புகழ் பெற்ற இலக்கிய ஆளுமைகள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. காஃப்கா , வில்லியம் கார்லோஸ் , வில்லியம்ஸ் , ழான் காத்து , கேப்ரியல் கார்சியா மார்வெஸ் , ஸ்டீபன் ஸ்வேக் , மிரோஜெக், ரேமண்ட் கார்வர் , விளாதிமிர் மெக்ரே , லியோெெலெட் லெடுக் , செல்மா லாகர் லெவ் , வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் , ஜே.ஆலன் பூன் , ஒனா நோ கோமாச்சி என்ற உலகின் எங்கெங்கோ வாழும் எழுத்தாளர்களின் எழுத்துகள் வழியாக நம்முடன் ஆழமான ஒரு பந்தத்தை உருவாக்கியுள்ளதை உணர முடிகிறது இப்புத்தகம் வாசித்த பிறகு .

Read more

“வேள்பாரி” படிக்கத் திகட்டாத சரித்திர புனைகதை புத்தகம் | சு.வெங்கடேசன்

ஒரு புதிய தமிழ் வாசிப்பாளர் “பொன்னியின் செல்வன்” புத்தகத்தைத்தான் முதலில் வாசிக்கத்துவங்குவார். அதற்குக் காரணம், அதுதான் அதிகப்படியான பேர் பேசிக்கொள்ளும் புத்தகமாக இருக்கும். அதுபோன்றதொரு இடத்தை சு.வெங்கடேசன் அவர்கள் எழுதியுள்ள வேள்பாரி புத்தகமும் பிடித்துள்ளது என்பதே எதார்த்தமான உண்மை. புத்தக விற்பனையங்களிலும் கண்காட்சிகளிலும் வேள்பாரி புத்தகத்தை சுற்றி ஒரு கூட்டம் குழுமியிருப்பது அதன் வாசகர் வட்டம் விரிவடைவதற்கு ஓர் சான்று.

Read more

“நரிப்பல்” இறையன்புவின் எளிய மனிதர்களின் சிறந்த கதைகள்

கடுமையான வேலைப்பளுவிலும் சமூகத்தை வளமாக்கும் பல புத்தகங்களை தொடர்ச்சியாக தந்துகொண்டிருப்பவர் தான் வெ.இறையன்பு ஐஏஎஸ். வாழ்வின் உயர்ந்த கருத்துக்களை எளிய மனிதர்களின் சாதாரண வாழ்வியல் சம்பவங்களில் இருந்து சிறப்பாக எழுதி இருக்கிறார் நூலின் ஆசிரியர். நரிப்பல் என்ற இந்த புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கும் பதினைந்து கதைகளும் ஒரு கருத்தை தாங்கி நிற்கிறது. அனைவரும் வாங்கிப்படிக்க வேண்டிய புத்தகம் இது. நீங்கள் வாசித்து முடிக்கும் போது பல மாற்றங்களை உங்கள் மனம் நிச்சயமாக அடைந்தே தீரும்.

Read more

“தமிழக அரசியல் வரலாறு” – தமிழக அரசியல் வரலாற்றை துவக்கம் முதல் தெரிந்துகொள்ள படிக்க வேண்டிய புத்தகம் – முத்துக்குமார்

ஆர். முத்துக்குமார் அவர்கள் “தமிழக அரசியல் வரலாறு” என்ற புத்தகத்தை இரண்டு பாகங்களாக எழுதி இருக்கிறார். தமிழக அரசியல் வரலாறு முதல் பாகத்தில் சுதந்திரம் பெற்றது முதல் எமர்ஜென்சி வரையிலான காலகட்டத்தில் தமிழகத்தில் நடைபெற்ற முக்கிய அரசியல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. தமிழக அரசியல் வரலாறு இரண்டாம் பாகத்தில் எம்ஜிஆர் ஆட்சி முதல் 2000 ஆம் ஆண்டு வரைக்குமான காலகட்டத்தில் தமிழக அரசியல் களத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் குறித்து தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த புத்தகத்தை வாசித்த பலரும், இந்தப் புத்தகம் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசியல் நிகழ்வுகளை பாரபட்சமின்றி நூலின் ஆசிரியர் எழுதி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

Read more