டென்மார்க் மகிழ்ச்சியான நாடாக இருப்பதன் அடிப்படை காரணம் இதுதானாம்

டென்மார்க் பெரும்பாலும் உலகின் மகிழ்ச்சியான நாடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது, எனவே உலக மக்கள் அனைவரும் தங்களது மனநிலையை மேம்படுத்துவதற்கான வழிமுறையை தெரிந்துகொள்ள டென்மார்க்கை கவனிப்பது அர்த்தமுள்ளதாக இருக்கிறது. டென்மார்க் மகிழ்ச்சியான நாடாக இருப்பதற்கு காரணங்கள் எத்தனையோ இருக்கலாம், ஆனால் அப்படியிருந்தும், அதன் மகிழ்ச்சிக்கு முக்கியமான ரகசியத்தைக் கற்றுக்கொள்வதன் மூலம் நாம் அனைவரும் பயனடையலாம். உலகளாவிய மகிழ்ச்சி நிபுணரும், தி இயர் ஆஃப் லிவிங் டேனிஷ்லி மற்றும் தி அட்லஸ் ஆஃப் ஹேப்பினஸின் ஆசிரியருமான ஹெலன் ரஸ்ஸல் டென்மார்க் மகிழ்ச்சிக்கான காரணத்தை ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்துள்ளார். அதுதான் “நம்பிக்கை”

Read more

வாழ்க்கையை பிடித்ததாக மாற்றுவது எப்படி? உங்கள் வாழ்க்கையையே புரட்டிப்போடும் ஒரு கட்டுரை இது

உங்கள் மனதுக்கு விருப்பமான வேலையை செய்திடும் போது தான் வாழ்க்கை உங்களுக்கு பிடித்தமானதாக மாறுகிறது. தனக்கு பிடித்தமானது இதுதான் என்று தெரிந்தும் பல்வேறு சூழல்களால் வெவ்வேறு வேலைகளில் தங்களை மூழ்கடித்துக்கொண்டவர்கள் இங்கே பலர் உண்டு. ஆனால், தனக்கு எது பிடித்தமானது என்பதை கண்டறிய முடியாமலேயே பலர் பல வேலைகளை செய்வார்கள். அவர்கள் தான் உண்மையிலேயே மிகவும் பரிதாபமானவர்கள். நீங்களும் அத்தகைய சிக்கலில் இருந்தால், உங்களுக்கு எது பிடித்தமானது என்பதை அறிவதிலேயே சிக்கல் இருந்தால் இந்தப்பதிவு உங்களுக்கு பலன் தரும்.

Read more

80/20 பரேட்டோ கொள்கையை வெற்றி பெற பயன்படுத்துவது எப்படி?

இது அறிவியல் கொள்கையெல்லாம் அல்ல. ஆகவே நீங்கள் பயமின்றி இக்கொள்கை பற்றி தெரிந்துகொள்ளலாம். இத்தாலிய பொருளாதார வல்லுநர் வில்ப்ரெடோ பரேட்டோ இவ்விதியைப் பற்றி முதன் முதலாக எழுதியதால் அவரது பெயரால் இவ்விதி அழைக்கப்படுகிறது. தன்னுடைய வாழ்வில் சில விசயங்களை கவனிக்கும் போது அவை அனைத்தும் 80/20 என்ற அளவில் பிரிந்திருப்பதைக் கண்டார். உதாரணத்திற்கு, தன்னுடைய சமூகத்தில் மக்கள் 80/20 என்ற அளவில் பிரித்துப்பார்க்கப்பட்டதாக அவர் கூறினார். அதன்படி, பணத்தையும் செல்வாக்கையும் பொறுத்தவரை “முக்கியமான சிலர்” என்ற பிரிவில் 20% பேரும் “முக்கியமில்லாத பலர்” என்ற பிரிவில் 80% பேரும் இருந்ததாகவும் பரேட்டோ கூறினார்.

Read more

பணியிடத்தில் தனித்து தெரிய வேண்டுமா? இதை செய்து பாருங்கள்

நூறு பேர் வேலை செய்திடும் அலுவலகத்தில் ஒரு சிலர் மட்டும் தான் தனித்து தெரிவார்கள். புதிய வாய்ப்புகள் வந்தாலும், சவாலான வேலை என்றாலும் அவர்களால் தான் முடியுமென மேல் அதிகாரிகளால் நம்பப்படுகிறவர்கள் அவர்கள் தான். அந்த சிலரைப்போலவே கடுமையாக வேலை செய்கிறவர்களாக இருந்தும், இன்னும் சொல்லப்போனால் அவர்களை விடவும் அதிக விசயங்கள் தெரிந்தவராக இருந்தும் கூட பலர் அந்த இடத்தை பிடிக்க முடிவதில்லை. அனைவரும் ஒரே வேலையைத்தான் செய்கிறார்கள் என்றாலும் கூட “அந்த சிலர்” அதே வேலையை சற்று வித்தியாசமாக செய்து முடிப்பதனால் தான் அவர்கள் தனித்து தெரிகிறார்கள். நீங்களும் அந்த சிலரில் ஒருவராக பணியிடத்தில் தனித்து தெரிய வேண்டுமா? இதை செய்து பாருங்கள்.

Read more

அனில் அம்பானியை விடவும் முகேஷ் அம்பானி வெற்றியாளராக இருப்பது ஏன்? தெரியுமா?

திருபாய் அம்பானி [Dhirubhai] யின் இரண்டு திறமைசாலி பிள்ளைகள் தான் அனில் அம்பானியும் முகேஷ் அம்பானியும். 2002 ஆம் ஆண்டு திருபாய் இறந்த பிறகு மெல்ல மெல்ல சகோதரர்களுக்குள் மோதல் ஆரம்பித்தது. இருவருக்கும் இடையே இருக்கும் சண்டையை முடிவுக்கு கொண்டுவர சொத்துக்களும் நிறுவனங்களும் பிரிக்கப்பட வேண்டும் என்ற நிலை உருவானது. அப்போதைய காலகட்டத்தில், அம்பானி குடும்பத்தின் முகமாக இருந்தவர் அனில் அம்பானி. அவர் தான் முதலீட்டாளர்களுடன் நேரடி தொடர்பில் இருந்தவர். முகேஷ் அம்பானியோ அந்த காலகட்டத்தில் நிறுவனத்தை எப்படி முன்னேற்றுவது என்பதில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

Read more

இந்த விசயங்களை செய்யாமல் இருந்தாலே மகிழ்ச்சியாய் வாழலாம்

இந்த உலகில் அனைவருக்கும் பொதுவானதாக இருப்பது எதுவென்று நீங்கள் நிதானமாக சிந்தித்துப்பார்த்தால் ‘நேரம்’ என்பது மட்டும் தான் சரியான பதிலாக இருக்க முடியும். அப்படிப்பட்ட நேரம் என்பது யாருக்காகவும் எதற்காகவும் காத்துகொண்டு இருப்பது இல்லை, திரும்பவும் வருவதும் இல்லை. குறிப்பிட்ட அந்த நேரத்தை நாம் எப்படி பயன்படுத்திக்கொள்கிறோம் என்பதில் தான் நாம் எவ்வளவு புத்திசாலி என்பதை அறிய முடியும். நம்மில் பலர் தேவையற்ற பல விசயங்களில் நேரத்தை செலவிட்டு வாழ்க்கையை கடினமானதாக மாற்றிக்கொண்டு இருக்கிறோம். அப்படி நாம் எந்தெந்த விசயங்களுக்காக நேரம் ஒதுக்கிகொண்டு வீணடித்துக்கொண்டு இருக்கிறோம் என்பதைத்தான் இங்கே பார்க்க இருக்கிறோம்.

Read more