பெண் திருமண வயது 21 | மாற்றம் அவசியமா? | விவாதங்கள்

நாட்டின் 74வது சுதந்திர தினம் அண்மையில் கொண்டாடப்பட்டது. அப்போது உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் “பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18 இல் இருந்து 21 ஆக மாற்ற எடுக்கப்பட்டு வரும் பணிகள்” குறித்து பேசினார். பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயதை உயர்த்தும் பிரதமரின் முடிவை கட்சி பேதமில்லாமல் பலரும் ஆதரித்து வருகிறார்கள். தமிழகத்தை பொறுத்தவரைக்கும் ராமதாஸ், கனிமொழி உட்பட பலரும் வரவேற்பு தெரிவித்து இருக்கிறார்கள். வெற்று விசயங்களை சமூக வலைதளங்களில் விவாதித்துக்கொண்டு இருக்காமல் இவ்விசயம் குறித்து விவாதிப்பது மிகவும் அவசியமான ஆரோக்கியமான ஒன்று.

Read more

தேசியக் கல்விக் கொள்கை 2020 – சாதகக பாதக விசயங்கள் என்ன இருக்கிறது?

இளநிலை பட்டக் கல்வி , பன்நோக்கு வாய்ப்புகளுடன் 3 அல்லது 4 ஆண்டு கால படிப்பாக இருக்கலாம். இந்தக் காலத்திற்குள் பொருத்தமான சான்றிதழ் பெற வேண்டும். உதாரணமாக, ஓராண்டுக்குப் பின்னர் சான்றிதழ், 2 ஆண்டுக்குப் பின்னர் மேம்பட்ட டிப்ளமோ , 3 ஆண்டுக்குப் பின்னர் இளநிலைப் பட்டம், 4 ஆண்டுகளுக்குப் பின்னர் பட்டத்துடன் ஆராய்ச்சி சான்றிதழ் வழங்கப்படும். ஓராண்டு கல்வியுடன் வெளியேறினால் சான்றிதழ் மட்டுமே கிடைக்கும், இரண்டாண்டு கல்வியுடன் வெளியேறினால் டிப்ளமோ மட்டுமே கிடைக்கும்.
இந்திய மொழிகளை, கலைகளை, கலாசாரத்தை ஊக்குவிக்க பாடத்திடங்களை ஏற்படுத்துதல்.

Read more

யார் கடவுள்? – கண்ணதாசனின் பதில் இதோ!

பெரும்பாலானவர்கள் தங்களுக்கு தெரிந்த வகையில் கடவுளைத் தேடி பயணம் மேற்கொண்டு தான் இருக்கிறார்கள். வெளிப்படையாக சொல்லவேண்டும் என்றால் இதுவரைக்கும் கடவுள் நேரிடையாக தோன்றிய வரலாறு எங்கேயும் இல்லை. இதனை அனைவருமே ஒப்புக்கொண்டாகத்தான் வேண்டும். ஆனாலும் பன்னெடுங்காலமாக பெரும்பான்மையான மக்கள் கோவில்களுக்கு சென்று வணங்குதலை பின்பற்றியே வருகிறார்கள். சிலருக்கு கடவுள் பற்றிய புரிதல் இல்லாவிட்டாலும் கூட கோவில்களுக்கு நிம்மதியைத்தேடித்தான் செல்வதாக பலர் கடவுளையும் கோவில்களையும் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.

Read more

“ஆன்லைன் வகுப்பு” – தேவையா இப்போது?

கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. தற்போதைய முடக்கத்தில் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் காலவரையறை இன்றி மூடப்பட்டு இருக்கின்றன. கொரோனா நோய் தொற்று காரணமாக ஊரடங்கு ஆரம்பிக்கப்பட்ட உடனேயே தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்பில் அக்கறை செலுத்த துவங்கி விட்டன. எனக்குத்தெரிந்த சில குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் ஏப்ரல் மாதமே ஆன்லைன் வகுப்புகளை ஆரம்பித்து விட்டார்கள் [உண்மையான கல்வி ஆண்டு ஜூன் மாதத்தில் தான் துவங்கும்]. தற்போது அரசுப்பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் எடுப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. தமிழக அரசு தொலைக்காட்சிகளின் வாயிலாக பாடங்களை ஒளிபரப்பவும் ஏற்பாடுகள் செய்து வருவதாக தெரிகிறது.

Read more

“Fair and Lovely” பெயர் மாற்றம் உண்மையான மாற்றத்தை தருமா?

வெண்மை நிறம் தான் விரும்பத்தக்கது என்ற ரீதியில் விற்கப்படும் இரண்டு கிரீம்கள் விற்பனையை ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் நிறுத்தப்போகிறது. அதேபோல Fair and Lovely என்ற கிரீமின் பெயரில் இருக்கும் Fair என்ற வார்த்தை நீக்கப்பட இருப்பதாக யுனிலீவர் அறிவித்துள்ளது.

Read more

இளையராஜாவின் இசையை ஒருமுறை நேரில் கேட்டுவிடுங்கள்

தொலைக்காட்சியில் மட்டுமே இசை கச்சேரிகளை நேரடியாக பார்த்த அனுபவம். ஒருமுறை நேரடியாக பார்துவிடலாமே என்ற எண்ணத்தில் தான் வர சம்மதித்தேன். நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பாக நான் நினைத்துக்கொண்டது என்னவெனில், அவர் எங்கேயோ இருப்பார் 1000 ரூபாய் டிக்கெட் எடுத்த நாம் எங்கேயோ இருக்கப்போகிறோம், ஒன்றும் கேட்கப்போவது இல்லை. கூட்டத்தை பார்த்துவிட்டு வருவோம் என்று தான் எண்ணிக்கொண்டு இருந்தேன்.

Read more

எங்கிருந்து வந்தன வெட்டுக்கிளிகள்? |வெட்டுக்கிளிகள் படையெடுப்பு | கொரோனவை விட ஆபத்தானது | locusts swarms

நமது அண்டை நாடான பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் இதுவரைக்கும் வெட்டுக்கிளிகள் தாக்குதல் நடைபெற்றுள்ளன. குறிப்பாக ராஜஸ்தானில் அடிக்கடி வெட்டுக்கிளிகள் தாக்குதல் நடைபெறும். இந்த ஆண்டும் கூட 6,70,000 ஹெக்டர் பரப்பளவிலான பயிர்கள் சேதமடைந்தன. 1,000 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டது. ஆனால் தற்போது மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் வெட்டுக்கிளிகள் தாக்குதல் நடைபெற்றுள்ளது. மேலும் பிற மாநிலங்களை நோக்கியும் அவை நகரத்துவங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Read more

7 நாட்களில் 1200 கிமீ தொலைவை சைக்கிளில் கடந்த 15 வயதான ஜோதிகுமாரி, ஏன் ?

15 வயதான ஜோதிகுமாரி தனது காயமடைந்த தந்தையை சைக்கிளில் பின்பக்கத்தில் அமரவைத்துக்கொண்டு 1200 கிலோமீட்டர் தொலைவை 7 நாட்களில் கடந்து சொந்த ஊருக்கு திரும்பியிருக்கிறார் . இந்த நிகழ்வு இந்தியர்களின் உறுதியான சகிப்புத்தன்மையையும் அன்பையும் புரிந்துகொள்வதற்கு வாய்ப்பளிக்கிறது .

Read more

பெரியார் உண்மையை உணர்ந்த அந்த தருணம் | Periyar

சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்ட ஏழை எளிய மக்களை அந்நிலையிலிருந்து மீட்க பகுத்தறிவு என்னும் பேராயுதத்தை ஏந்தி வந்த இராமசாமி எனும் பெரியார் ஒரு வசதியான மேல்தட்டு குடும்பத்தில் பிறந்தவர். பெரியார் பற்றிய செய்திகளை வாசிக்கும்போது ஒரு உயர்ந்த சாதியில் நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்த ஒரு பிள்ளையால் எப்படி ஏழை எளிய மக்களின் வலியை உணர முடிந்தது? தான் சார்ந்த மேல்தட்டு மக்களையே எதிர்க்க துணிந்தது எப்படி? சாதியின் கொடுமையை எந்த தருணத்தில் பெரியார் உணர்ந்திருப்பார்? என்ற கேள்விகள் எழுந்ததுண்டு. அதற்கான பதிலை அமரர் கே பி நீலமணி என்பவர் எழுதிய “தந்தை பெரியார்” என்ற புத்தகத்தில் படித்தேன். அதைத்தான் இந்தப்பகுதியில் உங்களோடு பகிர்ந்துகொள்ள இருக்கிறேன்.

Read more

புவிசார் குறியீடு என்றால் என்ன? முழு தகவல்களும் இங்கே!

புவிசார் குறியீடு (Geographical indication, GI) என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தையோ, நாட்டையோ சார்ந்த தனித்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு வழங்கப்படும் குறியீடாகும். குறிப்பிட்ட உற்பத்தி பொருள் முறையாக பாரம்பரிய ரீதியில் தயாரிக்கப்பட்டதற்கும், தரத்தை காப்பதற்குமான சான்றாக இதை எடுத்துக்கொள்ளலாம்

Read more