RTO அலுவலகத்தில் வாகனம் ஓட்டாமல் ஓட்டுநர் உரிமம் பெறுவது எப்படி?

மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சகம் ‘சாலைகளில் விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் புது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாகவே, திறன்வாய்ந்த மற்றும் அனுபவம் வாய்ந்த ஓட்டுநர்களை உருவாக்கும் முயற்சியாகவே இந்த புதிய நடைமுறை உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி, அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் பயிற்சிப்பள்ளியில் சான்றிதழ் பெரும் ஒருவர் RTO அலுவகத்தில் ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கும் போது அதிகாரியிடம் ஓட்டி காண்பிக்கத்தேவை இல்லை’ என தெரிவித்துள்ளது.

Read more

இஸ்ரேல் – பாலஸ்தீனம் மோதலுக்கு இதுதான் காரணம்

மத்தியதரைக் கடலுக்கு கிழக்கே அமைந்துள்ள உலகின் ஒரே யூத நாடு இஸ்ரேல் தான். இங்கே வாழ்கிறவர்கள் யூதர்கள். இஸ்ரேல் கட்டுப்படுத்தி இருக்கும் பகுதியில் வாழ்ந்துகொண்டிருக்கும் அரபு மக்கள் தான் பாலத்தீனியர்கள் என அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் இஸ்ரேலின் சில பகுதிகளை பிரித்து பாலஸ்தீனம் என்ற தங்களுக்கான நாட்டை உருவாக்க போராடிவருகிறார்கள். இதற்கு இஸ்ரேல் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதுதான் இஸ்ரேல் பாலஸ்தீனம் இரண்டுக்கும் இடையேயான மோதலுக்கு காரணம்.

Read more

கொரோனா பாசிட்டிவ் வந்த ஒருவர் அரசால் எப்படி கையாளப்படுகிறார்?

கொரோனா தாக்குதலுக்கான அறிகுறிகள் தெளிவாக தெரிந்த பின்பும் கூட மருத்துவமனைக்கு பலர் செல்லத் தயங்குகிறார்கள். அவர்கள் காணும் சில காட்சிகள் அவர்களை மருத்துவமனைக்கு செல்ல அச்சமூட்டுகின்றன. உண்மையிலேயே ஒருவருக்கு கொரோனா பாசிட்டிவ் என வந்தால் அவர் அதற்குப்பிறகு அரசால் எப்படி கையாளப்படுகிறார் என்பதை இங்கே பார்க்கலாம். நேரடி அனுபவம் பெற்றவரின் கருத்தின்படி எழுதப்பட்ட கட்டுரை

Read more

விவேகானந்தர் – ஜேம்ஷெட்ஜி டாடா சந்திப்பு எப்படி இந்தியாவையே புரட்டிப்போட்டது?

உலக அளவில் சிறந்த தொழில்நுட்ப ஆய்வு நிறுவனமாக விளங்கி வருகிறது இந்தியன் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் [Indian Institute of Science (IISC)]. இதனை உருவாக்கிட அடித்தளமிட்டவர் ஜேம்ஷெட்ஜி டாடா. ஆனால் அவருக்கு அத்தகைய எண்ணத்தை விதைத்தவர் சுவாமி விவேகானந்தர். ஆச்சர்யமாக உள்ளதா? இருவரின் சந்திப்பு இந்திய தொழில்நுட்பத்துறையில் பெரிய மாற்றத்தை உண்டாக்கியது.

Read more

பாலியல் தொந்தரவு அளித்தவருக்கு ராக்கி கட்டவும் கல்யாணம் செய்யவும் சொல்லும் நீதிமன்றங்கள்

அண்மையில் அரசு ஊழியர் ஒருவர் ஒரு பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனுக்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு விசாரணையின்போது தான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி குற்றம் சுமத்தப்பட்ட அரசு ஊழியரிடம் இப்படி கேட்டார் ‘நீங்கள் பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்துகொள்ள ஒப்புக்கொண்டால் உங்களுக்கு பெயில் கிடைக்கும். இல்லையேல் பெயில் கிடைக்காது. நீங்கள் அரசு வேலையை இழக்க நேரிடும். சிறைக்கும் செல்ல நேரிடிடும். நாங்கள் கட்டப்படுத்துவதாக இதனை நீங்கள் நினைத்தால் நிராகரிக்கலாம்’ என கேட்டார்.

Read more

ஒரு சமூகத்தையே உயர்த்திய மில்லியனர் : ஹாரிஸ் ரோசன் | Harris Rosen

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருக்கிறது தாஞ்செலோ பார்க் [Tangelo Park]. தாஞ்செலோ பார்க் என்பது குறைந்த அளவு மக்கள்தொகை கொண்ட பகுதி. 1950 வாக்கில் ஆரஞ்சு பழம் பயிரிட அந்த இடம் பயன்படுத்தப்பட்டது. அதற்காக சிலர் அந்த பகுதியில் குடியேற பின்னாட்களில் அங்கேயே மக்கள் வாசிக்கத்துவங்கி விட்டார்கள். சுற்றுப்புறத்தில் உள்ள பகுதிகள் அனைத்தும் நல்ல நிலையில் இருக்க இந்த பகுதியோ போதைப்பொருள்கள், குற்றங்கள் நிறைந்த பகுதியாகவே இருந்து வந்தது. இந்தப்பகுதியை மேம்படுத்த பலர் முயன்றும் கூட அதில் பலன் கிட்டவில்லை. ஆனால் 1993 ஆம் ஆண்டு முதல் அந்தப்பகுதியில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படத்துவங்கின. அதற்கு காரணம், ஆட்சியாளர்களோ கண்டிப்பான அதிகாரிகளோ இல்லை, ஹாரிஸ் ரோசன் எனும் ஹோட்டல் அதிபர் தான் அத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தினார்.

Read more

சர்வதேச மகளிர் தினம் – ஏன் மார்ச் 8 அன்று கொண்டாடப்படுகிறது?

துவக்கத்தில் கம்யூனிஸ்ட் நாடுகளில் தான் மார்ச் 08 மகளிர் தினமாக கொண்டாடப்பட்டது. சர்வதேச அளவில் பெண்களின் உரிமைக்காக குரல் எழுந்தபோது இந்த தினம் சர்வதேச முக்கியத்துவத்தை பெற்றது . ஐக்கிய நாடுகள் சபையும் 1977 முதல் மார்ச் 08 ஐ சர்வதேச மகளிர் தினமாக அங்கீகரித்தது.

Read more

திரு.ராம்நாத் கோவிந்த் – சுயசரிதை, வாழ்க்கை வரலாறு, அரசியல் பயணம், குடும்பம்

இந்தியாவின் 14வது குடியரசுத்தலைவராக பதவியேற்றுக்கொண்ட திரு ராம்நாத் கோவிந்த் அவர்கள் அடிப்படையில் ஒரு வழக்கறிஞர், வழக்கறிஞராக நீண்ட காலம் பணியாற்றியவர், பீகார் மாநிலத்தின் ஆளுநராக பதவி வகித்தவர், ராஜ்யசபாவின் உறுப்பினராக இருமுறை பதவி வகித்த காலத்தில் பல்வேறு நாடாளுமன்ற குழுக்களில் அங்கம் வகித்து சிறப்பாக செயலாற்றிவர், ஏழை எளிய மக்களுக்காக சட்டபூர்வ உதவிகள் பல புரிந்தவர் என பல்வேறு சிறப்புக்களோடு இந்தியாவின் முதல் குடிமகன் பதவியை அலங்கரித்து வருவபர் தான் திரு. ராம்நாத் கோவிந்த் அவர்கள். அவரைப்பற்றி விரிவாக அறிவோம் வாருங்கள்.

Read more

சம்பளத்தில் 20% ஐ பிறருக்கு உதவி செய்யும் ஒரு தலைமை காவல் அதிகாரி

ஒரு மாதத்தில் குறைந்தது 30 பேருக்கேனும் உதவி செய்திட வேண்டும் என்பதை உறுதியாக கொண்டிருக்கும் கிருஷ்ணமூர்த்தி வயதானவர்களுக்கு இடம் பெயர்ந்தவர்களுக்கு உணவு, உடை, மருந்து, மருத்துவ உதவி என செய்துவருகிறார். இதுதவிர, முக்கியமான நாட்கள் மற்றும் முக்கியமான நபர்களின் பிறந்த தினங்களின் போது தலைவர்களின் வாழ்க்கை வரலாற்று புத்தகங்களை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கிவருகிறார். பெரியவர்களின் வாழ்க்கை வரலாற்றை படிப்பதன் மூலமாக சிறுவர்கள் தாங்களும் அவர்களைப்போல வர வேண்டும் என எண்ணுவார்கள் என்பது கிருஷ்ணமூர்த்தி அவர்களின் நம்பிக்கை.

Read more

மகளுக்கு சல்யூட் அடித்த அப்பா? அங்கே நடந்தது என்ன?

இவர்கள் இருவரும் ஒரே மாநிலத்தில் பணியாற்றினாலும் கூட வெவ்வேறு மாவட்டங்களில் பணியாற்றியதால் வேலை நேரத்தில் இருவரும் சந்தித்துக்கொள்வது கிடையாது. Ignite எனும் புரோகிராம் ஜனவரி 4 முதல் 7 வரை திருப்பதியில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக வந்தபோது தான் ஒருவரை ஒருவர் பணி நேரத்தில் சந்தித்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. மகளைக் கண்டவுடன் வழக்கமாக உயர் அதிகாரிகளுக்கு சல்யூட் அடிப்பதைப்போல சல்யூட் அடிக்க முற்பட்டார் ஷியாம். ஆனால் தனக்கு அப்பா சல்யூட் அடிப்பதை விரும்பாத ஜெஸ்ஸி எனக்கு நீங்கள் சல்யூட் அடிக்க வேண்டாம் அப்பா என கேட்டுக்கொண்டார்.

Read more