பங்குச்சந்தை பற்றிய அறிய சூப்பர் புத்தகம் : அள்ள அள்ளப் பணம் – சோம.வள்ளியப்பன்

ஸ்மார்ட் போன், ஆன்லைன் பண பரிவர்த்தனை போன்ற வசதிகள் காரணமாக யார் வேண்டுமானாலும் பங்குசந்தையில் முதலீடு செய்திட முடியும். ஆனால், அனைவராலும் வெற்றி பெற முடிவதில்லை என்பதே எதார்த்தம். நீங்கள் வெற்றிபெற வேண்டும் என நினைத்தால் பங்கு சந்தையின் ஒவ்வொரு அம்சத்தையும் அறிய வேண்டியது அவசியம். அதற்கு சரியான புத்தகம் சோம.வள்ளியப்பன் எழுதிய அள்ள அள்ளப் பணம் என்ற புத்தகம்.

புத்தகத்தின் பெயர் :அள்ள அள்ளப் பணம்
ஆசிரியர் :சோம.வள்ளியப்பன்
விலை : 1290

Click Here To Download/Buy

 

பங்குச்சந்தை என்றால் என்ன? அதுவொரு சூதாட்டம் என்கிறார்களே உண்மையா? பங்குசந்தையில் யார் வேண்டுமானாலும் பணம் போட்டு லாபம் சம்பாதிக்கலாமா? பங்குகளை எங்கே வாங்குவது எப்படி விற்பது? இப்படி உங்கள் மனதில் எழக்கூடிய ஆயிரம் கேள்விகளுக்கு தெள்ளத்தெளிவாக பதில் சொல்கிறது இந்தப்புத்தகம். 

 

பங்குச்சந்தை பற்றிய அத்தனை அடிப்படை விசயங்களையும் சின்ன சின்ன உதாரணங்களோடு எடுத்துச்சொல்லும் இந்த புத்தகம் போன்று வேறு புத்தகத்தை பார்க்க முடியாது. பங்கு சந்தையில் நுழைந்து, அடிபடாமல் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறவர்கள் கைகளில் அவசியம் இருக்க வேண்டிய புத்தகம். 

 

அள்ள அள்ளப் பணம் புத்தக நூல் வரிசை : 

 

1. பங்குச்சந்தை அடிப்படைகள் 

2. பங்குச்சந்தை அனாலிசிஸ் 

3. பியூச்சர் அண்ட் ஆப்ஷன்ஸ் 

4. போர்ட்போலியோ முதலீடுகள் 

5. பங்குசந்தை ட்ரேடிங் 

6. மியூச்சுவல் பண்ட்

7. தங்கம் குறித்து சகலமும்


பங்குச்சந்தை சிலரை கோடீஸ்வரர் ஆக்கியதும் உண்டு பலரை கடனாளி ஆக்கியதும் உண்டு. பங்குச்சந்தையில் பணத்தை இழந்தவர்கள் அதனை சூதாட்டம் என்பதும் உண்டு, அதனை சரியாக செய்தால் நல்ல தொழில் என்போரும் உண்டு. பல இளைஞர்கள் இன்று பங்குச்சந்தையில் சில நூறு முதல் சில ஆயிரம் வரைக்கும் முதலீடு செய்கிறார்கள். விளம்பரங்களும் தொழில்நுட்பமும் புதியவர்களை பங்கு சந்தையின் பக்கம் வெகுவாக ஈர்க்கிறது. 

 

பங்குச்சந்தை குறித்த அடிப்படை விசயங்களை கற்றுக்கொண்ட பிறகு முதலீடு செய்தால் நிச்சயமாக அதிலே லாபம் ஈட்ட முடியும். ஒட்டுமொத்த மார்க்கெட்டும் விழுந்தால் கூட பெரிய நஷ்டம் ஏற்படாமல் உங்களை காத்துக்கொள்ள முடியும். பங்குச்சந்தை குறித்து தெரிந்துகொள்ள இன்று பல வாய்ப்புகள் உள்ளன. அதிலே முக்கியமான ஒன்று தான் சோம.வள்ளியப்பன் எழுதிய அள்ள அள்ளப் பணம் என்ற புத்தகம். 

 

பங்குச்சந்தையில் பல ஆயிரம் ரூபாய் முதலீடு செய்கிற ஒருவர் வெற்றிபெற வேண்டும் எனில் நிச்சயமாக அடிப்படை விசயத்தை அறிந்துகொண்டு களத்தில் இறங்க வேண்டும். அதற்கு உற்ற துணையாக விளங்கும் இந்தப்புத்தகத்தை வாங்க நீங்கள் ஓரளவு பணத்தை முதலீடு செய்வது நிச்சயமாக வெற்றிகரமான முதலீடாக அமையும். அடிப்படை விசயங்களை அறிந்துகொள்ளாமல் தயவு செய்து பங்குச்சந்தையில் முதலீடு செய்யவே வேண்டாம். 

எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்



மேலும் நூல்கள் பற்றி படிக்க….

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *