ஜூன் மாதத்தின் முதல் வாரம் LGBTQ சமூகத்திற்கான சிறப்பு வாரமாக கொண்டாடப்படுகிறது. அதனை ஒட்டி சென்னையில் வண்ணமயமான பேரணி LGBTQ அமைப்பினரால் நடத்தப்பட்டது. அதிலே அவர்கள் தங்களுக்கான உரிமை, அங்கீகாரம் குறித்த கோரிக்கைகளை முன்வைத்தார்கள். அவர்களது முக்கிய கோரிக்கையாக இருப்பது என்னவெனில் “தங்களை சக மனிதர்களாக நடத்த வேண்டும்” என்பது தான். பல உலக நாடுகளில் இவர்களுக்கான சமூக அங்கீகாரம் வேகமாக கிடைத்து வருகிறது. ஆனால், இந்தியாவில் இந்த மாற்றம் மெதுவாகவே நடந்து வருகிறது. LGBTQ வில் இருப்பவர்கள் குறித்த புரிதல் பரவலாக நடந்தால் மட்டுமே இந்த சமூகம் மாற்றம் அடையும். அதற்கான ஒரு முயற்சியே இந்தப்பதிவு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *