குடும்பத்தினரோடு செலவு செய்யும் பொன்னான நேரமே முக்கியமானது – ஏன் ?

50 ஆண்டுகளுக்கு முன்பிருந்தவர்களின்  வேகத்தைவிட பல மடங்கு வேகமாக இன்று நாம் இயங்க ஆரம்பித்துவிட்டோம், பல மடங்கு சம்பாரிக்க ஆரம்பித்துவிட்டோம் . ஆனாலும் நம்மில் பலருக்கு இந்த வேகமும் போதவில்லை ,நேரமும் போதவில்லை.

இப்படி ஓடி ஓடி சம்பாரிப்பவர்களை ஒரு நிமிடம் நிறுத்தி கேட்டுப்பாருங்கள் “எதற்காக இப்படி ஓடுகிறீர்கள் ” என்று . ஒட்டுமொத்த மக்களின் ஒரே பதில் “குடும்பத்திற்க்காக ஓடி ஓடி உழைக்கிறேன்” என்பார்கள் . அவர்கள் சொல்வதும் உண்மைதான் . அனைவரின் ஓட்டத்திற்கு பின்னாலும் தனது பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் ,குடும்பத்தினர் சந்தோசமாக  இருக்க வேண்டும் என்கிற அக்கறைதான் பிரதானமாக இருக்கின்றது .

எங்கு பிரச்சனை வருகிறதென்றால்  எந்த குடும்பத்திற்காக ஓடி ஓடி வேலை செய்கிறோமோ அந்த குடும்பத்திற்க்காக நாம் நேரத்தை செலவிடாமல் வெறும் பணத்தை மட்டும் கொடுக்கும்போதுதான் நிகழ்கிறது .

ஆம் நண்பர்களே பணம் உங்களது பிள்ளைகளின் வாழ்விற்கு முக்கியமானதுதான் . ஆனால் அதைவிட உங்களது பிள்ளைகள் உங்களிடம் எதிர்பார்ப்பது அவர்களுடன் நீங்கள் செலவிடும் நேரத்தைத்தான் . பணத்தைவிட , அவன் ஓட்டப்பந்தயத்தில் வெல்லும் போது அருகில் இருந்து கைதட்டி ஊக்கப்படுத்தும் பெற்றோரைத்தான் அதிகமாக விரும்புகிறான் .
நல்லபள்ளியில் பிள்ளையை சேர்த்துவிட்டு அவன் ஆண்டுவிழாவில் பரிசு வாங்குவதை பார்க்க போகாமல் வேலைக்கு போவதென்பது  எப்படி உங்கள் பிள்ளையை ஊக்கபடுத்தும் ?
உண்மையில்உங்கள் பணத்தை விட நீங்கள் செலவிடும் நேரம்தான் திறமைசாலியாக பிள்ளையை வளர்த்தெடுக்கும் .

ஒருநாளில் 10 மணிநேரம் வேலைக்காக ஒதுக்குகிறீர்கள் என்றால் உங்களின் கனவு உங்களின் எதிர்காலம் என நினைக்கும் உங்கள் பிள்ளைக்காக மனைவிக்காக பெற்றோருக்காக சகோதரர்களுக்காக குறைந்தது 2 மணி நேரம் ஒதுக்குங்கள் .

பிள்ளைகளிடம் பள்ளியில் நடந்ததை கேளுங்கள் , மனைவியிடம் குடும்பத்தை பற்றி பேசுங்கள் , அப்பா அம்மாவிடம் சந்தோசமாக இருங்கள் . இவைதான் எதிர்காலத்திற்கு நீங்கள் சம்பாதித்து வைக்கும் அற்புத செல்வம் .

நம்மில் எத்தனை பேர் குழந்தைகளை நல்ல பள்ளியில் சேர்த்துவிட்டு சூ டிரஸ் வாங்கிக்கொடுத்துவிட்டு மாதாமாதம் பள்ளிக்கட்டணத்தை சரியாக கட்டிவிட்டு  பிள்ளை என்ன படிக்கிறான் ,பள்ளியில் எவ்வாறு நடந்துகொள்கிறான் , அவனது நண்பர்கள் யார் , போட்டிகளில் பங்கேற்கிறானா என எதுவும் தெரியாமலே வாழ்க்கையை  கடந்து கொண்டிருக்கிறோம் ?

பொன்னான நேரமென்பது குடும்பத்தினருடனான நேரமே ! சேகரியுங்கள் .

நன்றி

பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *