அருவியவலே!

கடலிலே மிதந்திடும் கப்பல் 

தடயம் விடுவதில்லை 

வானிலே நகர்ந்திடும் நிலவு 

தடயம் விடுவதில்லை 

செடியிலே பூக்கும் பூ 

தடயம் விடுவதில்லை 

நதியிலே நீந்தும் மீன் 

தடயம் விடுவதில்லை 

என்னில் உந்தன் பிரிவு 

மட்டும் விட்டுச்சென்றது 

தடயத்தை ……ஏனோ…

-ஸ்ரீ