கோவித்துக்கொள்ளாதே!

உனக்கு நிகரானவன் 

நான் இல்லையென 

ஒளிந்துகொள்ள நினைத்தாலும்

மாட வீதியில் 

அழகி நீ வருவதைக் 

கண்ட பின்பு

காந்தத்தை நோக்கி 

ஓடிவரும் துரும்பாக 

வந்துவிடுகிறேன் 

உன் முன்னால் ….

கோவித்துக்கொள்ளாதே !

-ஸ்ரீ