அவள் ஒரு தேவதை!

நிலவின் வெண்ணிற 

வெளிச்சத்தில் 

அவள் என்னைக்

கடந்த போது….

எதார்தமாய் 

அவள் பார்த்த 

ஒற்றை பார்வை

ஓராயிரம் பூக்களை 

என்னுள் பூக்கவிட்டன!

வறண்டு கிடந்த 

என் மனதை

ஒற்றை பார்வையால்  

பூங்காவாக்கி விட்டாள்!

எனக்குள் பூங்கா உருவானதை 

அவள் அறிந்திருக்க மாட்டாள்

அவளது பார்வை 

எங்கு பட்டாலும் 

பூங்காவாகும்.

அவள் ஒரு தேவதை!

– ஸ்ரீ