காசநோய் என்றால் என்ன ? தடுப்பது எப்படி ? விழிப்புணர்வு பதிவு #March24

உலகில் பல ஆயிரம் ஆண்டுகளாக காசநோய் கிருமி இருந்துவருகின்றது .உலகில் குறைந்தபட்சமாக 20 மில்லியன் மக்களுக்கு காசநோய் பாதிப்பு இருந்துவருகின்றது (2015 ). இதில் அதிகபட்சமாக 24 சதவிகிதம் இந்திய மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

காசநோய் என்றால் என்ன ?

மைக்கோ பாக்டீரியம் என்னும் பாக்டீரியாவினால் ஏற்படும் நோய் .

காசநோய் பரம்பரை நோயல்ல .

காற்றின் மூலமாக பரவுகிறது .

உலக அளவில் 33 சதவிகிதம் பேர் காசநோய் கிருமி தொற்றுக்கு ஆளாகி இருக்கிறார்கள் .

ஆனால் கிருமி தொற்று ஏற்பட்ட அனைவருக்கும் காசநோய் வருவதில்லை .

கிருமி தொற்று ஏற்பட்டவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது காசநோய் வருகின்றது .

காசநோய் அறிகுறிகள் :

 

இரவு நேரத்தில் காய்ச்சல் .

தொடர்ச்சியாக 3 வாரங்களுக்கு மேலாக இருமல் ஏற்படுதல் .

உடல் எடை குறைவு , சளியுடன் ரத்தம் வருதல் .

சாப்பாட்டில் நாட்டமின்மை ,களைப்பு ஏற்படுதல் .

நெஞ்சுவலி அறிகுறிகள் .

காசநோய் சிகிக்சை முறைகள் :

 

காசநோய்க்கு அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிக்சை அளிக்கப்படுகிறது .

தொடர்ச்சியாக 6 மாதங்களுக்கு சிகிக்சை எடுத்துகொண்டால் முழுவதுமாக குணப்படுத்திவிடலாம் .

இந்தியாவில் மட்டும் கிட்டதட்ட 10 லட்சம் மக்கள் சிகிச்சைக்கு வராமலே இருக்கின்றனர் . இவர்களால் இந்த நோய் அக்கம்பக்கத்தில் இருக்கும் 10 முதல் 15 நபர்களுக்காவது பரவிடுகிறது .

ஆகவே காசநோய்க்கான அறிகுறிகள் வந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைகளில் சோதனை செய்துகொண்டால் ஆரம்ப நிலையிலேயே நோயை குணப்படுத்தலாம் .

காசநோய் வராமல் தடுக்க என்ன செய்யவேண்டும் :

 

காசநோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்க நாம் மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏதுமில்லை என்பதே உண்மை

.

காசநோய் தடுப்பு முறைகள்

 

காசநோயால் பாதிக்கபட்டவர்கள் பின்வரும் முறைகளை கையாண்டால்
பிறருக்கு காசநோய் ஏற்படுவதை தவிர்க்கலாம் ,

காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இருமும்போது கைக்குட்டையை பயன்படுத்தலாம் .

கண்ட இடங்களில் எச்சில் துப்புவதை தவிர்த்து , அதனை மண்ணுக்குள் புதைத்துவிட வேண்டும் .

குளிரூட்டப்பட்ட அறையில் காசநோய் கிருமி அதிக நேரம் உயிர்வாழும் , மேலும் நோய் பாதிப்பு உள்ளவர்கள் கூட்டத்தில் நிற்பதை தவிர்க்கவேண்டும் .

வீட்டிலோ அல்லது உங்களுக்கு அருகாமையில் உள்ளவர்களுக்கோ காசநோய் பாதிப்பு ஏற்பட்டு இருந்தால் நீங்களும் சோதனை செய்துகொள்ளுதல் அவசியம் .

மிகப்பெரிய அளவில் உயிரிழப்புகளை ஏற்படுத்திவரும் காசநோய் குறித்த விழிப்புணர்வை பெறுவோம் , காசநோயை ஒழிப்போம் .

சமூகநலன் கருதி ….
பாமரன் கருத்து