இமையம் எழுதிய பெத்தவன் நாவல் | சாதிய படுகொலையில் பெற்றவர்களின் பரிதாபநிலை

மாற்று சாதியை சேர்ந்த ஆண் பெண் இடையே காதல் மலர்ந்தால் அங்கே சாதிய படுகொலைகள் நிகழ வாய்ப்பு உண்டு. அப்படி நடக்கும் சாதிய கவுரவ படுகொலைகளில் பல சமயங்களில் பெற்றோர்களின் பங்களிப்பு உள்ளதாக காட்டப்படுகிறது. தாங்கள் நேசித்து வளர்த்த பிள்ளையை கொல்ல உண்மையாலுமே பெற்றோர்களின் மனம் ஒப்புக்கொள்ளுமா? பெற்றோர்களை இந்த சாதிய சமூகம் எப்படி கட்டுப்படுத்துகிறது? மாற்று சாதி பையனை காதலிக்கும் பெண்ணை அடுத்த நாள் ஊரே சேர்ந்து கொல்ல முடிவெடுத்த பின்பு வீட்டிற்கு செல்லும் அந்தப்பெண்ணின் அப்பா எடுக்கும் அதிரடி முடிவு….பெற்றவர்களின் உண்மையான பிரதிபலிப்பாய் நமக்குத் தெரிகிறது. வாசிக்கும் கண்களை குளமாக்கி மனதை பிசைந்து எடுக்கும் உண்மையான சம்பவங்களின் பிரதிபலிப்பு இந்த நாவல். கண்டிப்பாக நீங்கள் வாசிக்க வேண்டிய புத்தகம் இது.

Read more