லட்சத்தீவு மக்களின் மீது அடக்குமுறையா? என்ன நடக்கிறது அங்கே?

அரபிக்கடலில் கேரளாவில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் தான் 36 சிறிய சிறிய தீவுகளாக இருக்கிறது லட்சத்தீவு. இதில் ஒரு தீவான பாராலி கடல் அரிப்பின் காரணமாக கடலுக்குள் மூழ்கிவிட்டபிறகு எஞ்சியிருக்கும் 35 தீவுகளில் மக்கள் வசித்து வருகிறார்கள். அங்கே வாழ்கிறவர்களில் 98% முஸ்லீம் மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏறக்குறைய குற்றங்களே இல்லாத ஒரு பிரதேசமாக வந்திருக்கிறது லட்சத்தீவு. இதற்கு மிக முக்கியக்காரணம், அங்கே மதுவிற்கு அனுமதி கிடையாது என்பதோடு இந்தியர்களாக இருந்தாலும் சரி வெளிநாட்டினராக இருந்தாலும் சரி அவர் இந்திய அரசின் முறையான அனுமதியை பெற்றபிறகே லட்சத்தீவுக்கு சுற்றுலா செல்ல இயலும்.

Read more