நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. அகில இந்திய அளவில் அதிக மதிப்பெண் பெற்ற அரசுப்பள்ளி மாணவர் என்கிற சாதனையை தமிழக மாணவர் ஜீவித் குமார் படைத்திருக்கிறார். இவர் நீட் தேர்வில் 664 மதிப்பெண் பெற்று பெருமை சேர்த்திருக்கிறார். அனிதா உட்பட பல மாணவர்கள் நீட் தேர்வு காரணமாக உயிரிழந்திருக்கக்கூடிய சூழ்நிலையில் ‘அரசுப்பள்ளி மாணவராலும் முடியும்’ என நிரூபித்துக்காட்டியிருக்கிறார். இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம்.
தமிழால் இணைவோம்
