கட்சுகோ சாருகாஷி – Katsuko Saruhashi


பெயர் : கட்சுகோ சாருகாஷி (Katsuko Saruhashi)
பிறப்பு : மார்ச் 22 , 1920
இறப்பு : செப்டம்பர் 29 , 2007
வயது : 87
பிறந்த இடம் : ஜப்பான்
விருது :
டாக்டர் பட்டம் (யுனிவர்சிட்டி ஆப் டோக்கியோ )
ஐப்பான் அறிவியல் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்
மியாகே விருது (Miyake Award)
டனக்கா விருது (Tanaka Award)
கட்சுகோ சாருகாஷி தான் வாழ்ந்த காலங்களில் பெரும்பாலானவர்களால் அறியப்படாதவராக , போதிய அங்கீகாரம் கொடுக்கப்படாதவராகவே இருந்து வந்திருக்கிறார் .
அவரது சாதனையை நினைவுகூறும் விதமாக கூகுள் நிறுவனம் தனது முகப்பில் டூடுள் போட்டுள்ளது .
அவரை பற்றிய சில தகவல்கள் உங்களுக்காக
கட்சுகோ சாருகாஷி இளமை பருவம் :
1920 ஆம் ஆண்டு டோக்கியோவில் பிறந்த சாருகாஷி தனது குழந்தை பருவத்தில் கூச்சமுடைய பெண்ணாகவே இருந்து வந்துள்ளார்.
தனது பள்ளியில் அமர்ந்திருக்கும் போது ஜன்னல் கண்ணாடிகளில் வழிந்தோடிய மழைத்துளிகளை கண்டு மழை எவ்வாறு உருவாகிறது என யோசனை செய்த போது தொடங்கியது அறிவியல் ஆராய்ச்சி.
இரண்டாம் உலகப்போரின் கடுமையான போராட்டங்களுக்கு பிறகு கல்வி கற்பதில் ஆர்வம் மிக்கவராக இருந்தார். அதற்க்கு அவரது அம்மாவும் உதவிக்கரம் நீட்டினார்.
ஒரு பெண் உண்மையான சுதந்திரத்தை அடைய சிறந்த கல்வியும் அறிவியல் அறிவும் பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்
டோகோ பல்கலைக்கழகத்தில் (Toho University) இணைந்து 1943 இல் பட்டம் பெற்றார்.
கட்சுகோ சாருகாஷி முதல் டாக்டர் பட்டம் :
படித்துக்கொண்டிருக்கும்போதே தனக்கு முன்னோடியாக வர போகும் மியாகே யசுவ் வை சந்தித்தார். மியாகே யசுவ் சாருகாஷிக்கு Meteorological Research Institute பணியும் ஒதுக்கினார்.
அந்த பணியினை மேற்கொண்டிருந்தபோது கடலில் கார்பன்டை ஆக்ஸைடு (CO2) அளவு குறித்து ஆராய்வதற்கான வாய்ப்பு கிடைத்தது.
தற்போது மட்டுமே விஞ்ஞான உலகம் கார்பன்டை ஆக்ஸைடு (CO2) குறித்து ஆராய்ந்து வருகின்றது ஆனால் அப்போது CO2 குறித்து எவரும் அறிந்திருக்கவில்லை.
தொடர்ச்சியாக காற்றில் இருக்க கூடிய வாயுக்களை அறிய சொந்தமாக ஒரு கருவியை கண்டறிந்தார்.
அவருடைய ஆராய்ச்சியில் பசுபிக் பெருங்கடல் தான் ஈர்த்த அளவினை விட இரண்டு மடங்கு கார்பன்டை ஆக்ஸைடை (CO2) வெளியிடுவதை கண்டறிந்தார்.
1957 இல் , அவருடைய மிக சிறப்பான செயல்பாடுகளின் காரணமாக வேதியியல் துறையில் முதன் முதலாக டாக்டர் பட்டத்தினை டோக்கியோ யுனிவர்சிட்டி வழங்கி கவுரவித்தது.
கட்சுகோ சாருகாஷி நியூக்ளியர் பாம் கதிர்வீச்சு ஆராய்ச்சி :
சாருகாஷி மற்றும் அவரது குழுவினர் தான் முதன் முதலாக அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியனால் சோதனை செய்யப்பட்ட அணுகுண்டினால் சுற்றுசூழலில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆராய்ந்தனர்.
இவரது சோதனையில் ரேடியோ கதிர்வீச்சு ஜப்பானை அடைந்தது தெரியவந்தது. இவரது அறிக்கைகளின் அடிப்படையில் தான் அந்த நாடுகள் அணுக்குண்டு சோதனை நடத்திட தடை விதிக்கப்பட்டது.
மிக சிறப்பான பணிகளை மேற்கொண்டிருந்தாலும் மேற்குலகம் அவரை எங்கும் மேற்கோள் காட்டியது இல்லை.
கட்சுகோ சாருகாஷி விருதுகளும் அங்கீகாரமும் :
டோக்கியோ பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையில் பட்டம் பெற்ற முதல் பெண்மணி சாருகாஷி, 1957.
ஜப்பான் அறிவியல் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் உறுப்பினர் சாருகாஷி தான்.
மியாகே விருது பெற்ற முதல் பெண்மணி சாருகாஷி தான்,1985.
தனது பெயராலேயே விருது ஒன்றினை தொடங்கி இளம் பெண் விஞ்ஞானிகளுக்கு வழிகாட்டியாக இருக்கக்கூடிய பெண் விஞ்ஞானிகளுக்கு வழங்கி வந்தார்.
தனது லட்சியமாக “திறமை கொண்ட பெண் விஞ்ஞானிகளை உலகிற்கு காட்டுவது தான், தற்போதுவரை அவர்களின் திறமை ரகசியமாகவும் புதைக்கப்பட்டும் இருக்கின்றன”
1993 இல் Tanaka பரிசினை இவருக்கு வழங்கியது Society of Sea Water Sciences.
ரகசியமாகவும் புதைக்கப்பட்டும் மறைக்கப்படுகிற பெண் விஞ்ஞானிகளின் திறமைகளை உலகின் பார்வைக்கு கொண்டு செல்வதே என் கடமை – கட்சுகோ சாருகாஷி (Katsuko Saruhashi
