Activist Swati Malival சுவாதி மாலிவால் : வன்கொடுமை சட்டத்திற்காக போராடிய இளம் போராளி

கடந்த பத்து நாட்களுக்கு முன்பாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு மரணதண்டனை வழங்குவது , விரைவு நீதிமன்றம் அமைப்பது என பல கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் தொடங்கினார் சுவாதி மாலிவால் (Swati Malival).

DCW (Delhi Commission For Women) என்கிற பெண்கள் நல அமைப்பின் தலைவராக இருக்கும் சுவாதி மாலிவால் ராஜ்காட் பகுதியில் போராட்டத்தை தொடங்கினார் . நாட்கள் ஆக ஆக இவரது போராட்டத்திற்கு ஆதரவு அதிகரித்துகொண்டே சென்றது .

அவரது அறவழி உண்ணாவிரதப்போராட்டம் , குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந் அவர்களின் அவசர சட்ட ஒப்புதலினால் முடிவுக்கு வந்தது .

புதிய வன்கொடுமை தடுப்பு சட்டம் என்ன தண்டணை வழங்குகின்றது …

New ordinance of Rape cases under Criminal law in Tamil | பாலியல் வன்கொடுமை அவசர சட்டம் தண்டணை விவரம்

உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக்கொண்ட அவர் பேசும்போது ” ஒவ்வொரு நாளும் மூன்று வயது நான்கு வயது சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டு கொலையும் செய்யப்படுகின்றனர் . இது குறித்து பல கடிதங்கள் , மனுக்கள் அனுப்பியிருக்கிறேன் . மேலும் ஐந்தரை லட்சத்திற்கும் அதிகமாக பொதுமக்கள் எழுதிய கடிதங்களை பிரதமருக்கு கொடுத்திருக்கிறேன் , பலனில்லை .

[embedyt]https://youtu.be/ouOpY50IzRU[/embedyt]

ஆகையால் தான் இந்த உண்ணாவிரத போராட்டம் தொடங்கினேன் . இதன் பின்னனியில் ஒரே நோக்கம் மட்டுமே .தற்போது அவசர சட்டம் மூலமாக வெற்றி கிடைத்துள்ளது . மக்களுக்கு வாழ்த்துக்கள் ” என்றார் .

அவருக்கு நம்முடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் , மேலும் அவரது போராட்டங்கள் வெற்றியடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் .

பாமரன் கருத்து