பாரதியார் கவிதைகள் – பாரத நாடு

பாரதியார் கவிதைகள் காலத்தால் நிலைத்து நிற்பவை. அவற்றை படிக்க விருப்பம் உள்ளோர் இங்கிருக்கும் கவிதைகளை வாசித்து கொண்டாடலாம். பாரதியார் எண்ணற்ற தலைப்புகளில் கவிதைகள், கட்டுரைகள் எழுதி இருக்கிறார். பாரதியார் தேசிய கீதங்கள், பாரதியார் தமிழ்நாடு கவிதைகள், பாரதியார் சுதந்திர கவிதைகள், பாரதியார் பக்தி கவிதைகள் என ஏராளம் உண்டு. அதிலே பாரத நாடு பகுதியில் இடம்பெற்றுள்ள கவிதைகள் தான் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

1. பாரத நாடு

1. வந்தே மாதரம்‌

2. வந்தே மாதரம்‌ 2

3. நாட்டு வணக்கம்‌

4. பாரத நாடு

5. பாரத தேசம்‌

6. எங்கள்‌ நாடு

7. ஜய பாரத!

8. பாரத மாதா

9. எங்கள்‌ தாய்‌

10. வெறிகொண்ட தாய்‌

11. பாரத மாதா திருப்பள்ளி எழுச்சி

12. பாரத மாதா நவரத்தின மாலை

13. பாரத தேவியின்‌ திருத்தசாங்கம்‌

14. தாயின்‌ மணிக்கொடி (மாதாவின்‌ துவஜம்‌)

15. துடிக்கின்ற நெஞ்சம்‌ (பாரத ஜனங்களின்‌ தற்கால நிலை)

16. போகின்ற பாரதமும்‌ வருகின்றபாரதமும்‌

17. பாரத சமுதாயம்‌

18. ஜாதீய கீதம்‌ -1

19. ஜாதீய கீதம்‌

பாரதியார் கவிதைகள் PDF Download

1. வந்தே மாதரம்‌

(தாயுமானவர்‌ ஆனந்தக்‌ களிப்பு மெட்டு)

ராகம்‌ – நாதநாமக்கிரியை தாளம்‌ – ஆதி

பல்லவி

வந்தே மாதரம்‌ என்போம்‌ – எங்கள்‌

மாநிலத்‌ தாயை வணங்குதும்‌ என்போம்‌. (வந்தே)

சரணங்கள்‌

ஜாதி மதங்களைப்‌ பாரோம்‌ – உயர்‌

ஜன்மம்‌இத்‌ தேசத்தில்‌ எய்தின ராயின்‌

வேதிய ராயினும்‌ ஒன்றே – அன்றி

வேறு குலத்தின ராயினும்‌ ஒன்றே (வந்தே)

ஈனப்‌ பறையர்க ளேனும்‌ – அவர்‌

எம்முடன்‌ வாழ்ந்திங்‌ கிருப்பவர்‌ அன்றோ?

சீனத்த ராய்விடு வாரோ? – பிற

தேசத்தர்‌ போற்பல தீங்கிழைப்‌ பாரோ? (வந்தே)

3. ஆயிரம்‌ உண்டிங்கு ஜாதி – எனில்‌

அன்னியர்‌ வந்து புகல்‌என்ன நீதி? – ஓர்‌

தாயின்‌ வயிற்றில்‌ பிறந்தோர்‌ – தம்முள்‌

சண்டைசெய்‌ தாலும்‌ சகோதரர்‌ அன்றோ? (வந்தே)

4. ஒன்று பட்டால்‌ உண்டு வாழ்வே – நம்மில்‌

ஒற்றுமை நீங்கில்‌ அனைவர்க்கும்‌ தாழ்வே

நன்றிது தேர்ந்திடல்‌ வேண்டும்‌ – இந்த

ஞானம்‌ வந்தாற்பின்‌ நமக்கெது வேண்டும்‌? (வந்தே)

5. எப்பதம்‌ வாய்த்திடு மேனும்‌ – நம்மில்‌

யாவர்க்கும்‌ அந்த நிலைபொது வாகும்‌

முப்பது கோடியும்‌ வாழ்வோம்‌ – வீழில்‌

முப்பது கோடி முழுமையும்‌ வீழ்வோம்‌ (வந்தே)

6. புல்லடி மைத்தொழில்‌ பேணிப்‌ – பண்டு

போயின நாட்களுக்‌ கினிமனம்‌ நாணித்‌

தொல்லை இகரழ்ச்சிகள்‌ தீர – இந்தத்‌

தொண்டு நிலைமையைத்‌ தூவென்று தள்ளி (வந்தே)

(இந்தியா, 1908- ல்‌ ஸ்வதேச கீதங்கள்‌)

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *