பிரான்சிஸ் கிருபா கவிதைகள்

மரம்

****************************************

நள்ளிரவில் அறுத்தோம்

நித்திரை பிரியாமல்

பெரும் சப்தத்தோடு அது

சரிந்து விழுந்தது மற்றொரு உறக்கத்தில்

காலையில் கண்விழித்த

இலைகளெல்லாம் கண்டன

ஒரு கனவு போல

காணாமல் போன மரத்தை.

****************************************

Share with your friends !