(சில) வங்கி மேனேஜர்களே இப்படி செய்யலாமா ? உங்களுக்கும் பொறுப்பு இருக்கிறதல்லவா…

இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தாக்குர் அரசு வழக்கறிஞரிடம் “மக்கள் புதிய நோட்டுக்காக வங்கி வாசலில் காத்துக்கிடக்கும் போது அண்மையில்  வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ஒரு சிலரிடம் கட்டுகட்டாக புதிய நோட்டுக்கள் பறிமுதல் செய்யபட்டது எப்படி ..அவர்களுக்கு மட்டும் இவ்வளவு புதிய நோட்டுகள் எப்படி கிடைத்தன ” என கேட்டனர் 

இதற்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர் சில வங்கி மானேஜர்கள் தவறாக நடந்துகொண்டு பண முதலைகளுக்கு பணத்தை மாற்றி தந்துள்ளனர் என்றார் ….
வங்கி ஊழியர்களுக்கு : 
பொது மக்கள்  இவ்வளவு கஷ்டத்திலும் நன்மை விளையும் என்ற நம்பிக்கை இருப்பதாலேயே அனைத்தையும் பொறுத்துக்கொ
ண்டு உள்ளனர் ….ஆனால் பொறுப்புடன் நடந்துக்கொள்ளவேண்டிய நீங்களோ அற்ப பணத்திற்கு ஆசைப்பட்டு தவறுகள் செய்யும் போது மக்களின் கஷ்டமும் அரசின் முயற்சியும்  வீணாகி போகின்றது …..
உங்களுக்கு இருக்கும் பொறுப்பை நீங்கள் உணர்ந்து நடந்தால் அனைவருக்குமே நல்லது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *