தமிழாற்றுப்படை நூல் – வைரமுத்து | Thamizhatrupadai Book


“3000 ஆண்டுத் தமிழை 360 பக்கங்களில் சொல்லிச் செல்லும் ஆழ்ந்த ஆய்வுக்கட்டுரைத் தொகுப்புநூல். தமிழுள்ளவரை நிலைபெறும் என்று சான்றோர் சான்றளித்த நூல்.”

நூல் பெயர் : தமிழாற்றுப்படை
நூல் ஆசிரியர் : வைரமுத்து
விலை : Rs 485

திரு வைரமுத்து அவர்கள் தமிழுக்கும் தமிழக மக்களுக்கும் அறிய தொண்டாற்றிவிட்டு சென்ற ஆளுமைகள் குறித்த ஆய்வுக்கட்டுரைகளை “தமிழாற்றுப்படை” எனும் பெயரில் கட்டுரையாக சமர்ப்பித்து வந்தார். தற்போது அனைத்து கட்டுரைகளையும் ஒருங்கிணைத்து “தமிழாற்றுப்படை” எனும் புத்தகமாக வெளியிட்டு இருக்கிறார்.

Download/Buy : தமிழாற்றுப்படை Thamizhatrupadai

கிட்டத்தட்ட 3000 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட தமிழ் மொழியின் வரலாற்றில் எண்ணற்ற பெருமக்கள் தமிழுக்கு பலவிதங்களில் தொண்டாற்றி இருக்கிறார்கள். அவர்களில் சிறந்த, உயர்ந்தவர்களை தேர்ந்தெடுத்து அவர்கள் செய்த அருங்கொடை குறித்த ஆய்வினை கட்டுரையாக வடித்திருக்கிறார் திரு வைரமுத்து அவர்கள்.

தொல்காப்பியர், கம்பர், அப்பர், திருமூலர், ஆண்டாள், வள்ளலார், உ.வே.சா, பாரதியார், மறைமலை அடிகளார், ஒவ்வையார், பெரியார் என பல ஆளுமைகளின் சிறப்புகள் குறித்து பல்வேறு தகவல்களை திரட்டி அதனை கட்டுரையாக கொடுத்திருக்கிறார். 3000 ஆண்டுகால தமிழ் ஆளுமைகளை தேடி தேடி படிப்பதாக இருந்தால் நமக்கு ஒரு பிறப்பு போதாது, ஆனால் தமிழாற்றுப்படை படித்தால் பெரும்பகுதியினை நாம் அறிந்துகொள்ள முடியும்.

ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகம்

தமிழாற்றுப்படை குறித்து வைரமுத்து அவர்கள் கூறியது, தமிழாற்றுப்படை என் மூளைப்பழம் பிழிந்த சாறு , இது என் வாழ்நாள் ஆவணம், இது என் உழைப்பின் உச்சம், இது தமிழர்களுக்கு நான் கொடுத்திருக்கும் எளிய கொடை என மகிழ்கிறார் திரு வைரமுத்து அவர்கள்.

தமிழாற்றுப்படை அமைப்பதற்கு என்ன நோக்கம் என்ற கேள்விக்கு திரு வைரமுத்து அவர்கள் இவ்வாறு கூறுகிறார் “ஒரு இனம் மிகப்பெரிய அளவில் பலவீனப்பட்டுபோவதற்கு என்ன தெரியுமா காரணம்? ஒரு இனத்திற்கு நேரக்கூடாத மிகப்பெரிய விபத்து அது தனது பெருமிதத்தை உணராமல் இருப்பதுதான்.

ஒவ்வொரு இனத்திற்கும் ஒரு பெருமிதம் உண்டு. மனிதனின் பேச்சை கேட்டு தன் பலம் அறியாமல் மிகப்பெரிய யானை ஒன்று தன் உடலை சுருக்கி முக்காலியின் மேல் நிற்பது எப்படி முட்டாள்தனமோ தன் இனத்தின் பெருமையை பெருமிதத்தை உணராமல் இருப்பது தமிழனின் சிறுமை என கூறும் வைரமுத்து அவர்கள் தமிழன் ஒவ்வொருவரும் தனது முன்னோர்களின் பேராற்றலையும் பெருமிதத்தையும் அறிந்துகொள்ளவேண்டும் என்பது தான்” ஒவ்வொருவரும் வாங்கிப்படிக்கவேண்டிய புத்தகங்களில் முக்கியமான புத்தகம் “தமிழாற்றுப்படை” ஏற்கனவே படித்தவர்கள் தங்களது அனுபவத்தை இங்கே கமெண்டில் குறிப்பிடலாம்.

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *