சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை | சாகித்ய அகாடமி விருது வென்ற அம்பையின் புத்தகம்

அம்பை எழுதிய ‘சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை’ சிறுகதைத் தொகுப்புக்காக 2021-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழில் இந்த விருதைப் பெறும் நான்காவது பெண் இவர். பொதுவாக அங்கீகாரம் குறித்தோ பேட்டிகள், விருதுகள் குறித்தோ கவலைப்படாதவர் அம்பை.
அம்பைக்கு முன்னும் பின்னும் பெண்கள் பலர் எழுதாமல் இல்லை. ஆனால், அம்பை எல்லாவற்றிலுமிருந்து விலகித் தனித்துவப் பாதையைத் தேர்ந்துகொண்டவர். பெண்களைப் பற்றியும் குடும்பத்துக்குள் பெண்களின் இருப்புப் பற்றியும் சிலர் எழுதிக் கடந்த நிலையில் அம்பையும் அதைத்தான் கைகொண்டார்.

Read more