மரப்பாச்சி சொன்ன ரகசியம் | குழந்தைகள் பெற்றோர்கள் படிக்க வேண்டிய புத்தகம்

ஒரு குழந்தை தனக்கு நடந்ததை தனது பெற்றோர், ஆசிரியர் ஆகியோரிடத்தில் எந்தவித அச்சமும் தயக்கமும் இன்றி தைரியமாக சொல்லும் மன பக்குவத்தோடு வளர்க்கப்பட்டால் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை தடுக்க முடியும் என்ற கருத்தை விதைக்கிறது மரப்பாச்சி சொன்ன ரகசியம் புத்தகம்

Read more

“வேள்பாரி” படிக்கத் திகட்டாத சரித்திர புனைகதை புத்தகம் | சு.வெங்கடேசன்

ஒரு புதிய தமிழ் வாசிப்பாளர் “பொன்னியின் செல்வன்” புத்தகத்தைத்தான் முதலில் வாசிக்கத்துவங்குவார். அதற்குக் காரணம், அதுதான் அதிகப்படியான பேர் பேசிக்கொள்ளும் புத்தகமாக இருக்கும். அதுபோன்றதொரு இடத்தை சு.வெங்கடேசன் அவர்கள் எழுதியுள்ள வேள்பாரி புத்தகமும் பிடித்துள்ளது என்பதே எதார்த்தமான உண்மை. புத்தக விற்பனையங்களிலும் கண்காட்சிகளிலும் வேள்பாரி புத்தகத்தை சுற்றி ஒரு கூட்டம் குழுமியிருப்பது அதன் வாசகர் வட்டம் விரிவடைவதற்கு ஓர் சான்று.

Read more

“கடவுள் கற்ற பாடம்” புத்தகம் வாசிக்க வேண்டிய கதைகளின் தொகுப்பு | சு.ஆ.வெங்கடசுப்புராய நாயகர்

கடவுள்களின் படைப்புத் தொழிலை இளம் கடவுளர்கள் எப்படிக் கையாளுகிறார்கள்? அவர்களுக்கு வெற்றி, தோல்வி, மன உளைச்சல், மானம், அவமானம் எல்லாவற்றையும் கடவுள் என்பவர் எப்படி எதிர்கொள்கிறார்கள். அவர்களும் நம்மைப் போலப் பல நிபந்தனைகளுக்கு உட்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்று வேடிக்கையாகக் கூறி பிரபஞ்ச இயக்கத்தின் ரகசியத்தை அங்கத நடையோடு ஒரு வாசகனை அதுவரையில் எதார்த்த கதைகளில் மூழ்கியிருந்த நிலையிலிருந்து புதிய திசையை நோக்கி ஒரு புதிய வாசிப்பு அனுபவத்தை இச்சிறுகதை வாசகனுக்கு ஏற்படுத்தி விடுகிறது.

Read more

“சாண்ட்விச்: புணர்தலின் ஊடல் இனிது” இளையோர் வாசிக்க வேண்டிய புத்தகம்

சாண்ட்விச்: புணர்தலின் ஊடல் இனிது : இந்தப்புத்தகத்தில் காமம் குறித்தும், பெண்கள் மீது ஆண்கள் கொண்டிருக்கும் உளவியலையும், ஆண்கள் எப்போதும் பெண்களை “ஆண்” என்ற இடத்திலிருந்து பார்ப்பதனால் ஒரு பெண்ணையும், பெண்ணின் உடலையும் புரிந்துகொள்ளவே முடியாது என்பதையும், பெண்கள் ஆண்களிடம் என்ன மாதிரியான காதலை எதிர்பார்க்கிறார்கள் என்பது போன்ற பல உணர்வுகள் விவரிக்கப்பட்டுள்ளன.

Read more

பனி மனிதன் – சிறுவர்களுக்கான மொழியில் எழுதப்பட்ட அருமையான ஜெயமோகன் புத்தகம்

தத்துவம், ஆன்மீகம், அறிவியல் போன்ற மேம்பட்ட விசயங்களை சிறுவர்கள் வாசித்து பயன்பெற சிறுவர்களுக்காவே சிறுவர்களின் மொழியில் எழுதப்பட்ட நாவல் தான் பனி மனிதன். ஆசிரியர் ஜெயமோகன் அவர்களின் மற்றுமோர் படைப்பு இந்தப்புத்தகம்.

Read more