“உங்களில் ஒருவன்” புத்தகம் | திமுகவினர் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம் | விலை ரூ 500

தற்போது தமிழக முதல்வராக இருக்கக்கூடிய திரு முக. ஸ்டாலின் அவர்கள் அண்மையில் அவரது சுயசரிதையின் முதல் பாகத்தை வெளியிட்டார். அதிலே அவரது பள்ளி துவங்கி கல்லூரி காலங்கள், இளமைப்பருவம், அரசியல் துவக்கம், திருமண வாழ்க்கை, மிசா போராட்டம் என அவரது 23 ஆண்டுகால நினைவுகளை பகிர்ந்துள்ளார். பூம்புகார் பதிப்பகம் வெளியிடும் இந்த நூலின் விலை ரூ 500. குறிப்பாக, திமுக உறுப்பினர்கள் தங்களது தலைவரின் ஆரம்பகால வாழ்க்கை பற்றி அறிந்துகொள்ள நினைத்தால் அதற்கான நல்வாய்ப்பாக இந்தப் புத்தகம் இருக்கும்.

Read more

“செகாவ் வாழ்கிறார்” புத்தகம் | ஆன்டன் செகாவ்வின் வாழ்க்கையை அறிய உதவும் எஸ்.ராமகிருஷ்ணன் புத்தகம்

தன்னுடைய இயல்பான எழுத்துக்களால் வாசிப்பாளர்களால் நித்தமும் கொண்டாடப்படுகிறவர் ஆண்டன் செகாவ். இந்த புத்தகத்தின் ஆசிரியர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் செகாவ் குறித்து ஆற்றிய உரைகளை கேட்கிறபோது மிகவும் சவாலான வாழ்க்கையை வாழ்ந்த போதும் அதனை நினைத்து எள்ளளவும் கவலைப்படாமல் அடுத்தகட்டத்துக்கு நம்பிக்கையோடு நகரும் செகாவ் ஒரு வாழ்வியல் போராளியாக செகாவ் இருந்திருக்கிறார் என அறிய முடிகிறது.

Read more

உங்களை வெற்றியாளராக்கும் நான்கு புத்தகங்கள் | விலை ரூ. 299 மட்டுமே | Success Mantra Books In Tamil

உங்களது மனதின் அற்புத சக்தியை ஊக்குவித்து உங்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்செல்ல உதவும் சிறந்த நான்கு புத்தகங்களின் தொகுப்பு இது. புத்தகம் எவ்வளவு எடை குறைவாக உள்ளதோ அதைப்போலவே படிப்பதற்கு இலகுவான வார்த்தைகளை தாங்கிய புத்தகங்கள் இlவை.

Read more

நான் இந்துவல்ல நீங்கள்? Book Pdf | இந்து மதம் குறித்த தேடலை அதிகமாக்கும் தொ.பரமசிவன் புத்தகம்

நான் இந்துவல்ல என்று உறுதிப்பட தெரிவிக்கும் தொப, கேள்வி பதில் பாணியில் இந்து மதம் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு விரிவான ஆழமான பதில்களை கூறிவிட்டு “நீங்கள்?” என்ற கேள்வியையும் முன்வைக்கிறார். இந்துமதம் குறித்து ஆழமான உண்மைகளைச் சொல்லும் சிறிய புத்தகம். Download நான் இந்து அல்ல நீங்கள் Book Pdf

Read more

“காவல்கோட்டம்” புத்தகம் மதுரையின் 600 வருட வரலாறு | சு. வெங்கடேசன்

காவல் கோட்டம் இதுவரை தமிழ் நாவல்களில் கையாளப்படாத கள்ளர்களின் வாழ்க்கை முறை குறித்த பிரதியினை கையாள்கிறது. மதுரை மாநகரின் கிட்டத்தட்ட 600 வருட வரலாற்றினை காலகாலமாக கையாள்கிறது இது மிகவும் ஒரு வித்தியாசமான முயற்சி. 2012 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவல் “காவல் கோட்டம்”.

Read more

“இடக்கை” நீதியின் குரலுக்காய் தன் வாழ்நாளை தொலைத்து போன தூமகேதுவின் கதை

செய்திடாத தவறுக்காக “குற்றவாளி” எனும் பெயரை சுமந்துகொண்டு நீதியின் குரலுக்காய் தன் வாழ்நாளை தொலைத்து போன தூமகேதுவின் கதைதான் இடக்கை என்ற நாவல். நாவல் முழுவதும் அநியாயமாக தண்டிக்கப்பட்டவர்கள் பற்றிய குறிப்புகள் ஏராளம். தான் நிரபராதி எந்த குற்றமும் செய்யவில்லை என நிருபணம் செய்ய முடியாத இயலாமை தூமகேது போன்றவர்களை காலமும் அதிகாரமும் எப்போதும் வஞ்சித்துக்கொண்டே இருக்கிறது.

Read more

“காஃப்கா எழுதாத கடிதம்” வாசிக்க வேண்டிய சிறந்த புத்தகம் | எஸ்.ராமகிருஷ்ணன்

உலகப் புகழ் பெற்ற இலக்கிய ஆளுமைகள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. காஃப்கா , வில்லியம் கார்லோஸ் , வில்லியம்ஸ் , ழான் காத்து , கேப்ரியல் கார்சியா மார்வெஸ் , ஸ்டீபன் ஸ்வேக் , மிரோஜெக், ரேமண்ட் கார்வர் , விளாதிமிர் மெக்ரே , லியோெெலெட் லெடுக் , செல்மா லாகர் லெவ் , வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் , ஜே.ஆலன் பூன் , ஒனா நோ கோமாச்சி என்ற உலகின் எங்கெங்கோ வாழும் எழுத்தாளர்களின் எழுத்துகள் வழியாக நம்முடன் ஆழமான ஒரு பந்தத்தை உருவாக்கியுள்ளதை உணர முடிகிறது இப்புத்தகம் வாசித்த பிறகு .

Read more

மண்டியிடுங்கள் தந்தையே : எஸ்.ராமகிருஷ்ணன் புத்தகம் | Mandiyidungal Thandhaiye

Mandiyidungal Thandhaiye –
ஒரு மகன் தனது தந்தையை மண்டியிட சொல்லி கேட்க்கும் சூழல் வருமாயின், அந்த தந்தை எந்த அளவு பெரிய, மன்னிக்க முடியாத குற்றத்தை செய்திருக்க வேண்டும். வருமானம் ஈட்டாமல் இருந்தர்க்காகவோ, பொறுப்பற்று திரியும் தந்தையை பார்த்தோ இந்த கேள்வி எழ வாய்ப்பில்லை. நிச்சயம் ஒரு துரோகத்தை அல்லது சமுதாயத்தால் துரோகம் என்று கட்டமைக்கப்பட்ட ஒன்றை அவர் செய்திருப்பின் இது நடந்திருக்கும் .

ஆம் இது ரஷ்ய எழுத்தாளர் மேதை லியோ டால்ஸ்டோய் அவரது வாழ்கையின் ஒரு பகுதி.

Read more

“வேள்பாரி” படிக்கத் திகட்டாத சரித்திர புனைகதை புத்தகம் | சு.வெங்கடேசன்

ஒரு புதிய தமிழ் வாசிப்பாளர் “பொன்னியின் செல்வன்” புத்தகத்தைத்தான் முதலில் வாசிக்கத்துவங்குவார். அதற்குக் காரணம், அதுதான் அதிகப்படியான பேர் பேசிக்கொள்ளும் புத்தகமாக இருக்கும். அதுபோன்றதொரு இடத்தை சு.வெங்கடேசன் அவர்கள் எழுதியுள்ள வேள்பாரி புத்தகமும் பிடித்துள்ளது என்பதே எதார்த்தமான உண்மை. புத்தக விற்பனையங்களிலும் கண்காட்சிகளிலும் வேள்பாரி புத்தகத்தை சுற்றி ஒரு கூட்டம் குழுமியிருப்பது அதன் வாசகர் வட்டம் விரிவடைவதற்கு ஓர் சான்று.

Read more

“தமிழக அரசியல் வரலாறு” – தமிழக அரசியல் வரலாற்றை துவக்கம் முதல் தெரிந்துகொள்ள படிக்க வேண்டிய புத்தகம் – முத்துக்குமார்

ஆர். முத்துக்குமார் அவர்கள் “தமிழக அரசியல் வரலாறு” என்ற புத்தகத்தை இரண்டு பாகங்களாக எழுதி இருக்கிறார். தமிழக அரசியல் வரலாறு முதல் பாகத்தில் சுதந்திரம் பெற்றது முதல் எமர்ஜென்சி வரையிலான காலகட்டத்தில் தமிழகத்தில் நடைபெற்ற முக்கிய அரசியல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. தமிழக அரசியல் வரலாறு இரண்டாம் பாகத்தில் எம்ஜிஆர் ஆட்சி முதல் 2000 ஆம் ஆண்டு வரைக்குமான காலகட்டத்தில் தமிழக அரசியல் களத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் குறித்து தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த புத்தகத்தை வாசித்த பலரும், இந்தப் புத்தகம் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசியல் நிகழ்வுகளை பாரபட்சமின்றி நூலின் ஆசிரியர் எழுதி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

Read more