“உங்களில் ஒருவன்” புத்தகம் | திமுகவினர் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம் | விலை ரூ 500

தற்போது தமிழக முதல்வராக இருக்கக்கூடிய திரு முக. ஸ்டாலின் அவர்கள் அண்மையில் அவரது சுயசரிதையின் முதல் பாகத்தை வெளியிட்டார். அதிலே அவரது பள்ளி துவங்கி கல்லூரி காலங்கள், இளமைப்பருவம், அரசியல் துவக்கம், திருமண வாழ்க்கை, மிசா போராட்டம் என அவரது 23 ஆண்டுகால நினைவுகளை பகிர்ந்துள்ளார். பூம்புகார் பதிப்பகம் வெளியிடும் இந்த நூலின் விலை ரூ 500. குறிப்பாக, திமுக உறுப்பினர்கள் தங்களது தலைவரின் ஆரம்பகால வாழ்க்கை பற்றி அறிந்துகொள்ள நினைத்தால் அதற்கான நல்வாய்ப்பாக இந்தப் புத்தகம் இருக்கும்.

Read more

“செகாவ் வாழ்கிறார்” புத்தகம் | ஆன்டன் செகாவ்வின் வாழ்க்கையை அறிய உதவும் எஸ்.ராமகிருஷ்ணன் புத்தகம்

தன்னுடைய இயல்பான எழுத்துக்களால் வாசிப்பாளர்களால் நித்தமும் கொண்டாடப்படுகிறவர் ஆண்டன் செகாவ். இந்த புத்தகத்தின் ஆசிரியர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் செகாவ் குறித்து ஆற்றிய உரைகளை கேட்கிறபோது மிகவும் சவாலான வாழ்க்கையை வாழ்ந்த போதும் அதனை நினைத்து எள்ளளவும் கவலைப்படாமல் அடுத்தகட்டத்துக்கு நம்பிக்கையோடு நகரும் செகாவ் ஒரு வாழ்வியல் போராளியாக செகாவ் இருந்திருக்கிறார் என அறிய முடிகிறது.

Read more

“காஃப்கா எழுதாத கடிதம்” வாசிக்க வேண்டிய சிறந்த புத்தகம் | எஸ்.ராமகிருஷ்ணன்

உலகப் புகழ் பெற்ற இலக்கிய ஆளுமைகள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. காஃப்கா , வில்லியம் கார்லோஸ் , வில்லியம்ஸ் , ழான் காத்து , கேப்ரியல் கார்சியா மார்வெஸ் , ஸ்டீபன் ஸ்வேக் , மிரோஜெக், ரேமண்ட் கார்வர் , விளாதிமிர் மெக்ரே , லியோெெலெட் லெடுக் , செல்மா லாகர் லெவ் , வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் , ஜே.ஆலன் பூன் , ஒனா நோ கோமாச்சி என்ற உலகின் எங்கெங்கோ வாழும் எழுத்தாளர்களின் எழுத்துகள் வழியாக நம்முடன் ஆழமான ஒரு பந்தத்தை உருவாக்கியுள்ளதை உணர முடிகிறது இப்புத்தகம் வாசித்த பிறகு .

Read more

“நரிப்பல்” இறையன்புவின் எளிய மனிதர்களின் சிறந்த கதைகள்

கடுமையான வேலைப்பளுவிலும் சமூகத்தை வளமாக்கும் பல புத்தகங்களை தொடர்ச்சியாக தந்துகொண்டிருப்பவர் தான் வெ.இறையன்பு ஐஏஎஸ். வாழ்வின் உயர்ந்த கருத்துக்களை எளிய மனிதர்களின் சாதாரண வாழ்வியல் சம்பவங்களில் இருந்து சிறப்பாக எழுதி இருக்கிறார் நூலின் ஆசிரியர். நரிப்பல் என்ற இந்த புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கும் பதினைந்து கதைகளும் ஒரு கருத்தை தாங்கி நிற்கிறது. அனைவரும் வாங்கிப்படிக்க வேண்டிய புத்தகம் இது. நீங்கள் வாசித்து முடிக்கும் போது பல மாற்றங்களை உங்கள் மனம் நிச்சயமாக அடைந்தே தீரும்.

Read more