கரிசல் கதை சொல்லி கி.ராஜநாராயணன் பற்றி தெரியுமா?

கரிசல் மக்களின் கதைகளை யார் விரும்பி படிக்கப்போகிறார்கள் என பிறர் நினைத்தார்களோ என்னவோ தெரியாது. ஆனால் கரிசல் மக்களுக்கும் வாழ்வியல் உள்ளது, ஏற்ற இறக்கங்கள் உள்ளது, அவர்களுக்கும் ஏக்கம் உள்ளது என்பதை தனது கதைகளின் வாயிலாக மண் மனம் மாறாமல் புனைவுகளை நாடாமல் உள்ளது உள்ளபடி எழுதினார். கரிசல் மக்களின் கதைகளை இலக்கியத்தின் அனைத்து முறைகளிலும் உலகிற்கு அறிமுகப்படுத்தினார். கடிதமாக, நாவலாக, சிறுகதையாக, இலக்கியமாக எழுதினார். “கரிசல் வட்டார வழக்கு அகராதி” என்ற ஒன்றினை எழுதி கரிசல் எழுத்தாளர்களுக்கு வலு சேர்த்தார் கி.ரா.

Read more