“உலகிலேயே மகிழ்ச்சியான மனிதர்” புத்தகம் வாசித்துவிட்டீர்களா? | The Happiest Man on Earth

எழுத்தாளர் மருதன் அவர்கள் எழுதிய  ‘ஹிட்லரின் வதை முகாம்கள்’ என்ற புத்தகத்தின் வாயிலாக வரலாற்றின் கொடுமையான “வதை முகாம்கள்” குறித்து தெரிந்து கொண்டிருப்போம். அங்கே, ஒரு மனிதன் சக மனிதனை இவ்வளவு மோசமாக நடத்திட முடியுமா என்ற கேள்விக்கு “முடியும்” என்பதை நிரூபித்து இருக்கும் ஹிட்லரின் வதை முகாம்கள். அப்படிப்பட்ட கொடுமையான, அதே சமயம் மிகவும் பாதுகாப்பான வதை முகாமில் இருந்து யாரேனும் தப்பித்து இருக்க வாய்ப்பு உள்ளதா? அப்படி ஒருவர் தப்பித்து இருந்தால் அவரால் மீதமுள்ள வாழ்க்கையை நிம்மதியாக வாழ்ந்துவிட முடியுமா? என்ற கேள்விகளுக்கு விடை தேடும் புத்தகம் தான் “The Happiest Man on Earth” என்ற புத்தகம். இதனை தமிழில் “உலகிலேயே மகிழ்ச்சியான மனிதன் எடி ஜேக்கூ” என மொழிபெயர்த்துள்ளார் நாகலட்சுமி சண்முகம்.

Read more

ஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர் | மருதன் | Sherlock Holmesaal Theerka Mudiyatha Puthir

வித்தியாசமான தலைப்புகளில் பல கட்டுரைகளை தாங்கி வந்துள்ளது இந்தப்புத்தகம். சிறிய விசயங்களை அடிப்படையாக வைத்துக்கொண்டு எப்படி நெடுங் கட்டுரைகளை படைக்க முடியும் என்பதற்கோர் உதாரணம் இது. எழுத்து குறித்து ஆர்வம் உள்ளவர்கள் , எழுத நினைப்பவர்கள்,அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது.

புத்தகம் : ஷெர்லாக் ஹோம்ஸ்ஸால் தீர்க்க முடியாத புதிர்

எழுத்தாளர் : மருதன்

விலை : ரூ 178

Read more

உங்களை வெற்றியாளராக்கும் நான்கு புத்தகங்கள் | விலை ரூ. 299 மட்டுமே | Success Mantra Books In Tamil

உங்களது மனதின் அற்புத சக்தியை ஊக்குவித்து உங்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்செல்ல உதவும் சிறந்த நான்கு புத்தகங்களின் தொகுப்பு இது. புத்தகம் எவ்வளவு எடை குறைவாக உள்ளதோ அதைப்போலவே படிப்பதற்கு இலகுவான வார்த்தைகளை தாங்கிய புத்தகங்கள் இlவை.

Read more