ஒரு புளியமரத்தின் கதை நாவல் | சுந்தரராமசாமியின் வாசிக்க வேண்டிய நாவல்

ஒரு புளியமரத்தின் கதை”, நவீன இலக்கிய வாசகர்கள் மத்தியில் மாளா புகழ் பெற்ற நாவல். ஒரு புதினம் பல்லாண்டுகளாக விரும்பி வாசிக்கப்படுபவையாக இலக்கியசூழலில் இருப்பதே சிறப்பான ஒன்றுதான். “தானுண்டு தன் வேலையுண்டு என நின்றுகொண்டிருக்கும் ஒரு புளியமரத்தின் வீழ்ச்சியை சொல்வது தான் இந்த நாவலின் மையம்.” கிளை பரப்பி, பூ பூத்து, காய் காய்த்து, பழம் பழுத்து, நிழலுக்கு ஒதுங்கும் பறவைகளுக்கும், மனிதர்களுக்கும் பண்டமாக மாறி மீண்டும் தனது விதையினால், சந்ததியினரை தோற்றுவிக்கும் சிறந்த வேலையை செம்மையாக செய்துவந்த ஒரு அப்பாவி புளியமரத்தின் வாழ்வினையும், வீழ்ச்சியையும் பேசிச்செல்கிறது இந்த நாவல். தொன்றுதொட்டு ஒன்றுமறியா அப்பாவி ஜீவராசிகளின் உயிர்கள் காவுவாங்கப்படுவது புராண இதிசாகங்கள் தொடங்கி, உலக யுத்தகாலகட்டங்கள் வரை, ஏன் இன்றும் நடத்தப்படுகிறது. அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கான நீதியானது, அடிவானம் மாதிரி எங்கோ தொடமுடியாத தூரத்திலேயே இருக்கிறது. அப்படி, நீதி மறுக்கப்பட்ட ஜீவராசியான புளியமரத்தின் கதையினைத் தான் தூலமானதாக ஆக்குகிறது இந்நாவல்.

Read more