இறையுதிர் காடு புத்தகம் | போகர் செய்த நவபாஷாண முருகன் சிலை வரலாற்றை அறிய படிக்கலாம்

அசைவில் தான் உலகம் இயங்குகிறது. கோள்கள், பூமி, காற்று, ஆறு என எல்லா இயற்கை சார்ந்த அசைவுகளே கால ஓட்டத்தை நகர்த்திச் செல்கிறது. அப்படி அசைய அசைய மனிதன் தனது செயல்களை செய்கிறான். செயல்கள் நன்மையோ அல்லது தீமையோ புரிகின்றது. அதற்கேற்ப கர்மங்களில் சிக்கி இந்த காற்றடைத்த உடலையும், மலஜலம் புரியும் சரீரத்தையும் மனிதனின் ஆன்மா சுமந்துகொண்டு திரிகிறது. அந்த அசையும் தன்மையே விடுத்து அசையா தியானத்தில் அமர்ந்து தன்னையே அறிதல் என்னும் நிலையை அடைவதே சித்தம் எனப்படும். அத்தகைய மனிதத்துவத்தை கடந்த மாமனிதர்களை நாம் சித்தர்கள் என்கிறோம்.

Read more