சக்கர நாற்காலியில் விஞ்ஞான உலகை ஆண்ட மாமனிதன் ஸ்டீபன் ஹாக்கிங் #StephenHawking

பெரும்பாலானவர்களுக்கு ஸ்டீபன் ஹாக்கிங் என்ற மாபெரும் விஞ்ஞானி நம்மோடு வாழ்ந்து வந்தாரா என்பது தெரியாமல் கூட இருக்கலாம் . காரணம் அவர் உலக புகழ் பெற்ற ஐன்ஸ்டின் உள்ளிட்டவர்களுடன் ஒப்பீடு செய்யப்பட்டமையால் இவரும் பழங்கால விஞ்ஞானி என எண்ணியிருக்க கூடும் .

ஆனால் நண்பர்களே அத்தகைய மாபெரும் அறிவியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் நாம் வாழ்ந்த காலத்திலே தான் வாழ்ந்தார் . அவர் இன்று (மார்ச் 14 2018 ) இயற்கை எய்தினார் .

அவரை பற்றி அறிந்துகொள்ள சில சுவராஸ்யமான கருத்துக்களை நினைவு கூறுகிறோம் .

 

சக்கர நாற்காலியில் உலகை ஆண்டவர் ஸ்டீபன் ஹாக்கிங் :

 

கணிதத்தில் மிகபெரிய ஆர்வம் கொண்டிருந்த இவர் தனது 21 ஆம் வயதில் மோட்டார் நியூரான் என்னும் கொடிய நோயால் தாக்கப்பட்டார் . கழுத்திற்கு கீழே உள்ள உடல் இயங்காமல் போனது . இவருக்காக கண் அசைவுகளை மொழியாக மாற்றக்கூடிய சாப்ட்வேர் கண்டுபிடிக்கப்பட்டு அதன் மூலமாக தனது கண்டுபிடிப்புகளை உலகிற்கு வழங்கினார் .

வாழ்வின் பெரும்பகுதியை சக்கர நாற்காலியிலேயே கழித்திருந்தாலும் இந்த நூற்றாண்டின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் ஹாக்கிங் நிச்சயமாக நிரந்தர இடம் பெறுவார் .

 

ஹாக்கிங் ரேடியேஷன் :

 

1973 இல் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இருந்தபோது கருந்துளை குறித்த ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டார் . ஹாக்கிங் அவர்கள் கருந்துளை வெடித்து சிதறும்போது ஆற்றலை வெளியிடும் எனவும் பார்டிகிள்ஸ் கூட வெளியிடப்படும் , எடையிழப்பு ஏற்படும் என கூறினார் . அவ்வாறு வெளிப்படும் ரேடியேஷனில் கருந்துளை பற்றிய தகவல் ஏதும் இருக்காது .கருந்துளை மறையும்போது அனைத்தும் மறைந்துபோகும் எனவும் கூறினார் .

 

ஏலியன் இருக்கிறார்கள் ,ஸ்டீபன் ஹாக்கிங்  :

 

உலகின் முன்னனி விஞ்ஞானியான ஹாக்கிங் அண்டத்தின் ஏதோ ஒரு பகுதியிலாவது நம்மை போன்ற உயிரினங்கள் அதாவது ஏலியன்கள் இருப்பார்கள் என நம்பினார் . அவர்கள் நிச்சயமாக நம்மையோ அல்லது நாம் அவர்களையோ தொடர்பு கொள்வோம் என நம்பினார் .

இதுவரை ஏலியன்கள் கண்டறியப்படாத நிலையில் இனி வரும் காலங்களில் ஹாக்கிங் அவர்களின் கூற்று உண்மையாகுமா ?

 

சொர்க்கம் என்ற ஒன்று இல்லை :

 

உலகின் பெரும்பான்மையான மக்களால் இன்றும் நம்பபடுவது இறப்பிற்கு பிறகான “சொர்க்கம்” . பூமியை விட்டு மனிதர்கள் வெளியேற வேண்டும் , சொர்க்கம் என்பது மரணம் பற்றிய நம் பயத்தை குறைப்பதற்காக முன்னோர்கள் பயன்படுத்திய பதம் என விளக்கமளித்தார் ஹாக்கிங் .

 

பூமியை காலி செய்து மாற்று கிரகத்திற்கு செல்லுங்கள் :

 

அளவுக்கு அதிகமாக இயற்கை வளங்களை பயன்படுத்துதல் , புவி வெப்பமயமாதல் போன்ற பல காரணிகளை அடிப்படையாக வைத்து இந்த பூமி விரைவில் நம் பயன்பாட்டிற்கு லாயக்கற்றதாகி மனிதர்கள் வாழ தகுதியற்று போகும் . ஆகவே மாற்று கிரகத்திற்கு செல்வதே உகந்தது என கூறினார் ஹாக்கிங் ..அவர் சொன்னது நடக்கும் என்றே நினைக்க தோன்றுகிறது .

 

சிறந்த எழுத்தாளர் ஹாக்கிங் :

பெரும்பாலும் விஞ்ஞானிகள் எழுத்தாளர்களாக இருப்பது கிடையாது . ஆனால் ஹாக்கிங் மிக சிறந்த எழுத்தாளர் . அவருடைய பிரிப் ஹிஸ்டரி ஆப் டைம் ( ‘A Brief History of Time: From the Big Bang to Black Holes’ ) உலக அளவில் அதிக விற்பனையான அதிகம் பேரால் படிக்கப்பட்ட புத்தகம் .

1993 ஆண்டு வெளியான “Black Holes and Baby Universes

1998 ஆண்டு வெளியான “Stephen Hawking’s Universe: The Cosmos Explained

2002 ஆண்டு வெளியான “The Theory of Everything: The Origin and Fate of the Universe” இவை அனைத்தும் உலகம் இருக்கும்வரை ஹாக்கிங் புகழ் சொல்லும் .

காலத்தை ஆராய்ந்த மேதையை காலம் நாற்காலியில் கட்டிப்போட்டாலும் முயன்று பல சாதனைகளை படைத்த ஸ்டீபன் ஹாக்கிங் என்றுமே “சாதனை நாயகனாக” வரலாற்றில் நிலைப்பார் .

பாமரன் கருத்து